பொன்சேகாவின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது

Published By: Raam

14 Mar, 2016 | 08:23 AM
image

இலங்கையின் கௌர­வத்தை கேள்விக் குறி­யாக்கும் வெளி­நாட்டுத் தேவையை நிறை­வேற்­றவே முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத்­பொன்­சேகா பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றினார் எனக் குற்­றம்­சாட்டும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம், யுத்­தத்தை முடித்­தவர் யார் ? என்ற கௌர­வத்தை தான் பெற்­றுக்­கொள்­வ­தற்கு சரத்­பொன்­சேகா முயற்­சித்­துள்ளார் என்றும் தெரி­வித்­தது.

இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்­டர். வசந்த பண்­டார மேலும் கூறு­கையில்,

சரத்­பொன்­சே­காவின் பாரா­ளு­மன்ற உரை­யா­னது குரோத மனப்­பான்­மை­யு­ட­னான மஹிந்த ராஜ­ப­க் ஷ­வையும்,

கோத்­தாப ராஜ­ப­க்ஷ­வையும் பழி­வாங்கும் விதத்­தி­லான உரை­யாகும். இவ­ரது உரை­யினால் நாட்டின் கௌரவம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை நாட்டின் கௌர­வத்தை பாதிக்கும் விதத்தில் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அடித்­த­ளத்தை போட்டுக் கொள்­வ­தற்­காக சரத்­பொன்­சே­கா­வை வெளி­நா­டுகள் பயன்­ப­டுத்திக் கொண்­டுள்­ளன என்றே கூற வேண்டும். அவ­ரது உரை­யா­னது முன்னாள் இரா­ணுவத் தள­ப­தியின் உரை­யாக இல்லை. மாறாக பழி­வாங்கும் எண்­ணத்­து­ட­னான உரை­யா­கவே உள்­ளது.

யுத்தம் முடிந்­து­விட்­டது இனி இரு தரப்­பி­னரும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன்­னிப்பை வழங்கி நல்­லி­ணக்­கத்­திற்கு வித்­திட வேண்டும். தென்­னா­பி­ரிக்­காவில் உண்­மையை கண்­ட­றியும் விசா­ர­ணைகள் முடி­வ­டைந்த பின்னர் இவ்­வா­றான நிலையே ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மூலம் நாட்டின் நிலை­யான சமா­தா­னத்­தையும், இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த முடியும். அதை­வி­டுத்து சரத்­பொன்­சே­காவின் உரை நல்­லி­ணக்­கத்­துக்கு பாத­க­மாக அமைந்­துள்­ளது. இக் கருத்து சர்­வ­தேச விசா­ர­ணைக்கு சாட்­சி­யாக அமையப் போவ­தில்லை.

யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும் பிர­பா­கரன் உயி­ரோ­டி­ருந்தார் என்ற சரத்­பொன்­சே­காவின் கூற்றை ஏற்­றக்­கொள்ள முடி­யாது. ஏனென்றால் யுத்தம் முடிவடைந்த போது சரத்பொன்சேகா உள்நாட்டில் இருக்கவில்லை. எனவே இது சாட்சியாக இருக்கப் போவதில்லை. ஆனால் நாட்டின் கௌரவத்திற்கு எதிரான சேறுபூசுவதாக அமையும் என டாக்டர். வசந்த பண்டார தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24
news-image

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட...

2026-08-08 16:47:17