இலங்கையின் கௌரவத்தை கேள்விக் குறியாக்கும் வெளிநாட்டுத் தேவையை நிறைவேற்றவே முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா பாராளுமன்றத்தில் உரையாற்றினார் எனக் குற்றம்சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், யுத்தத்தை முடித்தவர் யார் ? என்ற கௌரவத்தை தான் பெற்றுக்கொள்வதற்கு சரத்பொன்சேகா முயற்சித்துள்ளார் என்றும் தெரிவித்தது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். வசந்த பண்டார மேலும் கூறுகையில்,
சரத்பொன்சேகாவின் பாராளுமன்ற உரையானது குரோத மனப்பான்மையுடனான மஹிந்த ராஜபக் ஷவையும்,
கோத்தாப ராஜபக்ஷவையும் பழிவாங்கும் விதத்திலான உரையாகும். இவரது உரையினால் நாட்டின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நாட்டின் கௌரவத்தை பாதிக்கும் விதத்தில் சர்வதேச விசாரணைக்கு அடித்தளத்தை போட்டுக் கொள்வதற்காக சரத்பொன்சேகாவை வெளிநாடுகள் பயன்படுத்திக் கொண்டுள்ளன என்றே கூற வேண்டும். அவரது உரையானது முன்னாள் இராணுவத் தளபதியின் உரையாக இல்லை. மாறாக பழிவாங்கும் எண்ணத்துடனான உரையாகவே உள்ளது.
யுத்தம் முடிந்துவிட்டது இனி இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை வழங்கி நல்லிணக்கத்திற்கு வித்திட வேண்டும். தென்னாபிரிக்காவில் உண்மையை கண்டறியும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர் இவ்வாறான நிலையே ஏற்படுத்தப்பட்டது.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நாட்டின் நிலையான சமாதானத்தையும், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும். அதைவிடுத்து சரத்பொன்சேகாவின் உரை நல்லிணக்கத்துக்கு பாதகமாக அமைந்துள்ளது. இக் கருத்து சர்வதேச விசாரணைக்கு சாட்சியாக அமையப் போவதில்லை.
யுத்தம் முடிவடைந்த பின்னரும் பிரபாகரன் உயிரோடிருந்தார் என்ற சரத்பொன்சேகாவின் கூற்றை ஏற்றக்கொள்ள முடியாது. ஏனென்றால் யுத்தம் முடிவடைந்த போது சரத்பொன்சேகா உள்நாட்டில் இருக்கவில்லை. எனவே இது சாட்சியாக இருக்கப் போவதில்லை. ஆனால் நாட்டின் கௌரவத்திற்கு எதிரான சேறுபூசுவதாக அமையும் என டாக்டர். வசந்த பண்டார தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM