காசநோயை கண்டறிய நவீன பரிசோதனை முறை அறிமுகமாகியுள்ளது.
உலகம் முழுவதும் காசநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டில் மட்டும் 1.3 மில்லியன் மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். எயிட்ஸிற்கு அடுத்ததாக உலகளவில் மரணத்தை அளிக்கக்கூடிய நோயாக காசநோய் உருவாகியிருக்கிறது. இதனை 2022 ஆம் ஆண்டிற்குள் தடுக்கவேண்டும் அல்லது முற்றாக கட்டுப்படுத்தவேண்டும் என்று கருதி உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து 13 பில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியிருக்கிறது.
இந்நிலையில் காசநோய் வளரும் நாடுகளைச் சேர்ந்த சில நாடுகளில் தான் இருக்கிறது என்றும், அங்கிருந்து உலகம் முழுவதும் காற்றின் மூலமாகவும் இது பரவுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கை சொல்கிறது.
நெருக்கமான உறவுகளுக்கு காற்றின் மூலம் பரவும் தன்மைக் கொண்ட இந்த காசநோயைப் பற்றி முதலில் அவர்களைச் சார்ந்த உறவினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். யாருக்காவது காசநோயின் அறிகுறி தென்பட்டால் அவர்களை தற்போது அறிமுகமாகியிருக்கும் GeneXpert என்ற நவீன பரிசோதனையை செய்து கொள்ளவேண்டும்.
இதன் மூலம் நோயாளியின் சளி, எச்சில், கோழை போன்றறை துல்லியமாக பரிசோதிக்கப்படும். அதன்பிறகு காசநோயின் பாதிப்பு தொடக்க நிலையில் காணப்பட்டால், கூட்டு சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
தொடக்கநிலையில் இருக்கும் போதே இதனை காற்றின் வழியாக பரவும் தன்மைக் கொண்டால் வாயிற்கு பிரத்யேக துணியிலான முகமூடியை போட்டுக் கொள்ளலாம். எந் பணிகளை மேற்கொள்ளாமல் இருக்கலாம்.
நெருங்கிய உறவினர்களை குறிப்பிட்ட தூரத்தில் நின்று உரையாடுமாறு கேட்டுக் கொள்ளலாம். இது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தால் காசநோயை பரவாமல் தடுக்க இயலும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM