தமிழர்கள் பிரிந்து நிற்பதனால் தான் துன்பங்கள் துயரங்களை அனுபவிக்கிறார்கள்- இராதாகிருஸ்ணன்.

Published By: Daya

28 Sep, 2018 | 04:07 PM
image

தமிழர்கள் பிரிந்து நிற்பதனால்தான் துன்பங்கள், துயரங்கள் வருகின்றன என தெரிவித்தார் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

வடமாகாணசபை நல்லபடியாக செயற்பட்டு வருகிறது அதன் செயற்பாடு எதிர் காலத்தில் அதிகரிக்கப்பட வேண்டும். 

அடுத்த தேர்தல் வரும்போது எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வடமாகாணத்தின் ஆளுமையை கட்டியெழுப்பக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும். 

தமிழர்கள் பிரிந்து நிற்பதனால்தான் துன்பங்கள், துயரங்கள் வருகின்றன எனத் தெரிவித்தார் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்.

கரவெட்டி ஸ்ரீநாரதா வித்தியாலயத்தின் பொன் விழா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசாலையில் அதன் அதிபர் ச.சுபேந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்;

நகரத்தை நோக்கி பாச்சல் கொடுக்கிற காலத்திலே கிராமப் புற பாடசாலைகள் முன்னேறுவது என்பது சற்று சிரமமான காரியம். 

பாடசாலைகளில் எதிர் வரும் காலங்களில் மாணவர்களின் தொகையை அதிகரிக்க வேண்டும். 

முன்பு ஒரு குடும்பத்தில் 8 , 10 பிள்ளைகள் இருப்பார்கள் ஆனால் இப்போது 2 பிள்ளைகளுடன் சிறிய, நல்ல குடும்பம் என இருக்கிறார்கள்.

பாடசாலைகளில் மாணவர்களின் தொகை அதிகரிக்கப்பட வேண்டும். இல்லாது போனால் பல பாடசாலைகளை மூடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தார். அதற்கான திட்டங்கள் செயற்பட வேண்டும். 

தமிழர்கள் பிரிந்து நிற்பதனால்தான் துன்பங்கள், துயரங்கள் அதிகமாக வருகின்றன.

அதனாலே 13 ஆவது திருத்தச் சட்டத்தை விஷேடமாக வடமாகாணத்திற்கு கொண்டுவரப்பட்டது.

வடமாகாணசபை இன்னும் 3 , 4 மாதங்களில் தேர்தலை நோக்கி பயணிக்கவுள்ளது.

அப்போது இங்குள்ள தமிழர்கள் உறுதியாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நல்லமுறையில் இயக்கக் கூடிய, இயக்கிக் கொண்டிருக்கிற மாகாண சபையை இன்னும் மென்மேலும் வளர்ச்சிப் பாதையிலே செல்வதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.

வடமாகாண கல்வி அமைச்சர் கே. சர்வேஸ்வரன் தனது காலத்தில் நல்ல முயற்சிகளை செய்துள்ளார்.

அவரின் பணி எதிர் காலத்திலும் தொடர வேண்டும் எனத்தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17
news-image

விகாஷ்னி சதாசிவத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-01-18 17:51:01
news-image

யாழ்ப்பாணம் - பாசையூரில் எம்.ஜீ.இராமசந்திரனின் 108...

2025-01-18 15:57:12
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40