(எம்.மனோசித்ரா)
நாடு மற்றும் நகரங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் வேகத்திற்கு மாறாக நாட்டிலுள்ள அரச அதிகாரிகள் பழங்காலத்து விடயங்களில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர் என கொழும்பு மாநாகர சபை முதல்வர் றோசி சேனாநாயக்க தெரிவித்தார்.
பெண்கள் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் 33 வருட பூர்த்தி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமது மக்கள் பழமைக்கு பழகிவிட்டனர். எனவே அவர்கள் மாற்றமடைவதற்கு விரும்புவதில்லை.
புதிய முறையில் சிந்திப்பதற்கும், பார்ப்பதற்கும் எமது நாட்டிலுள்ள பெரும்பாலான அரச அதிகாரிகள் விரும்புவதில்லை. காரணம் அவர்கள் பழமையில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
அபிவிருத்திகள் கிராமங்களை சென்றடையாமையே இதற்கான பிரதான காரணமாகும் என தனது உரையாடலின் போது தெரிவித்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM