மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி கேள்வி
அ.தி.மு.க அரசை விமர்சனம் செய்தால் எமது நாக்கை அறுத்து விடுவார்களா? என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு காங்கிரஸ் தி.மு.க கட்சிகளே காரணம். ஏழு பேர் உயிரை வைத்து அரசியல் செய்யவேண்டாம்.
ஏழு பேர் சிறையில் வாடுவதற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். ஏழு பேரை ஆளுநர் விடுவித்தால் விடுவிக்கட்டும். இல்லையேல் சிறையில் இருக்கட்டும். இதனை அரசியலாக்கவேண்டாம்.
ஏழு பேரையும் விடுவிக்கக்கூடாது என காங்கிரஸ் திட்டவட்டமாக சொல்லியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பதில் என்ன? அதே சமயத்தில் தமிழக அமைச்சர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து பேசவேண்டும்.
பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது.அதிமுக அரசை நான் விமர்சனம் செய்தால் எமது நாக்கை அறுத்துவிடுவார்களா? என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக அமைச்சர் துரைக்கண்ணு, அ.தி.மு.க அரசை லஞ்ச ஆட்சி என்று யாராவது விமர்சனம் செய்தால் அவர்களின் நாக்கை அறுத்துவிடுவேன் என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேரை விடுவிக்கக்கூடாது என்று அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பதினைந்து குடும்பத்தினர் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து மனு அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM