பொலிஸாரல் தாக்கபட்ட இளைஞன் வைத்தியசாலையில்

Published By: Robert

13 Mar, 2016 | 12:20 PM
image

பொகவந்தலாவ கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 32வயது மதிக்கதக்க கோவிந்தசாமி ஞானகண்ணா என்ற இளைஞன் கடந்த 8ம்,9ம் திகதி இரண்டு நாட்களாக வெலிகடை பொலிஸாரால் தடுத்து கடுமையாக தாக்கபட்ட இளைஞன் நேற்றைய முன்தினம் இரவு பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக  பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் கொழும்பு வெலிகடை பகுதியில் ஆடைதொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும் கடந்த மாதம் 11ம் திகதி பொகவந்தலாவையில் இருக்கும் தனது வீட்டுக்கு விடுமுறை பெற்று கொண்டு வந்திருத்தபோது, குறித்த இளைஞனின் மனைவியின் வங்கி கணக்கு இலக்கத்திற்கு 15 ஆயிரம் ரூபா ஆடைதொழிற்சாலையின் உரிமையாளர் வைப்பிலிடப்பட்ட பணத்தை பெற்று கொண்ட இளைஞன் மீண்டும் ஆடைதொழிற்சாலைக்கு தொழிலுக்கு செல்லாமை இருந்ததன் பொருட்டு குறித்த ஆடைதொழிற்சாலையின் உரிமையாளர் வெலிகடை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்து இருந்தமை குறிப்பிடதக்கது.

முறைபாட்டினை பதிவு செய்து கொண்ட வெலிகடை பொலிஸார் கடந்த 07ம் திகதி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்கு, கோவிந்தசாமி ஞானகண்ணா என்பவரை வெலிகடை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தகவல் அனுப்ப பட்டமைக்கு அமைய குறித்த இளைஞன் 08ம் திகதி வெலிகடை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார்.

வெலிகடை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற இளைஞனை தான் 2 இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளையடித்து உள்ளாதாகவும் இந்த குற்றசாட்டினை ஏற்றுகொள்ளுமாறு கூறி குறித்த இளைஞனை வெலிகடை பொலிஸார் கடுமையாக தாக்கியதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் கோவிந்தசாமி ஞானகண்ணா நேன்றைய தினம் முறைபாட்டினை பதிவுசெய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்கப்பட்ட இளைஞனுக்கு வெலிகடை பொலிஸாரால் கடந்த 10ம் திகதி பினை வழங்கப்பட்ட பிறகு குறித்த இளைஞன் நேற்றைய தினம் வெலிகடை பொலிஸாருக்கு எதிராக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இளைஞனின் முறைபாட்டினை பதிவு செய்து கொண்ட பொகவந்தலாவ பொலிஸார் சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸ் வலயத்திறக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படயிருப்பதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன், எஸ்.சதீஸ்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு10 மில்லியன்...

2025-12-11 20:57:03
news-image

கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் தனிப்பட்ட நிதியிலிருந்து‘Rebuilding...

2025-12-11 20:51:51
news-image

மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50...

2025-12-11 17:27:59
news-image

இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடலில்...

2025-12-11 17:15:58
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Maga...

2025-12-11 19:48:08
news-image

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு இரண்டு...

2025-12-11 19:41:49
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon...

2025-12-11 19:37:09
news-image

ஜேர்மன் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

2025-12-11 19:56:42
news-image

யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப...

2025-12-11 17:15:32
news-image

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவசர...

2025-12-11 19:06:32
news-image

அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின்...

2025-12-11 18:43:59
news-image

பேரிடருக்குப் பிறகு மீள்கட்டமைப்புத் தேவைகளுக்கு உலக...

2025-12-11 17:46:45