தமிழகம் வழங்கிய புத்தகங்கள் தொடர்பில் யாரும் குழப்பமடைய தேவையில்லை ; இராதாகிருஸ்ணன் 

Published By: Digital Desk 4

24 Sep, 2018 | 07:32 PM
image

தமிழக அரசினால் அண்மையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட 100000 புத்தகங்களில் 50000 புத்தகங்கள் யாழ் நுலகத்திற்கு வழங்கியுள்ள நிலையில் மிகுதி 50000 ஆயிரம் புத்தகங்களை ஏனைய மாகணங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தமிழ் நாட்டு அரசாங்கத்தால் கல்வி இராஜாங்க அமைச்சிற்கு கையளித்த 100000 புத்தகங்களில் 50000 ஆயிரம் புத்தகங்களை யாழ் நூலகத்திற்கு வழங்கியிருக்கின்றோம். மிகுதி 50000 ஆயிரத்தை ஏனைய மாகாணங்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கல்வி இராஜங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ் நூலகத்திற்கு வழங்கப்பட்ட பின்பு மிகுதியான புத்தகங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் கூறப்பட்ட நிலையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

இந்தியாவின் தமிழ் நாடு அரசாங்கத்தின் மூலமாக எங்களுடைய இராஜாங்க கல்வி அமைச்சிற்கு 100000 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அதனை பெற்றுக் கொள்வதற்காக நாம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த முயற்சியின் பயனாகவே இவை கிடைக்கப்பெற்றன. 

அதில் 50000 ஆயிரம் புத்தகங்களை அண்மையில் தமிழ்நாடு கல்வி பள்ளித்துறை

அமைச்சர் கே.ஏ.செய்கோட்டையனின் பங்குபற்றலுடன் யாழ் நூலகத்திற்கு கையளித்தோம். மிகுதியான புத்தகங்களை மத்திய, ஊவா, சப்ரகமுவ, உட்பட ஏனைய மாகாணங்களுக்கும் பாடசாலையில் இருக்கின்ற வாசிகசாலைகளின் அடிப்படையில் வழங்குவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.

மிகுதியாகவுள்ள 50000 ஆயிரம் புத்தகங்களும் எங்களுடைய கல்வி அமைச்சில் பாதுகாப்பாக

வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பகிர்ந்தளிப்பதற்காக நாம் அந்தந்த மாகாணங்களில் மாகாண கல்வி பணிப்பாளர்கள் ஊடாக தகவல்களை பெற்றுக் கொண்டு இந்த புத்தகங்களை கையளிக்க இருக்கின்றோம்.

எனவே இது தொடர்பாக யாரும் குழப்பமடைய தேவையில்லை. அனைத்து விடயங்களும் வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்படும்.

கடந்த காலங்களில் அவ்வாறான வெளிப்படை தன்மையுடன் அமைச்சுகள் செயற்பட்டதா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். நாங்கள் மீதமுள்ள புத்தகங்களை மிக விரைவில் ஏனைய மாகாணங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெள்ளவத்தையில் பெண் கடத்தல் ;  முன்னாள்...

2025-01-22 13:47:52
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20
news-image

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக...

2025-01-22 13:23:42
news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13