உழவு இயந்திரத்தில் சிக்குண்ட குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு

Published By: Vishnu

24 Sep, 2018 | 11:06 AM
image

உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மல்லாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கல்லாரை பகுதியை சேர்ந்த ஒரு வயதும் 8 மாதங்களுமான விஜயகாந்த் தஸ்மிலன் என்ற ஆண் குழந்தையே மேற்படி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

நேற்று நண்பகல் குறித்த குழந்தையின் தந்தை வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை இயக்கி பின்பக்கமாக கொண்டு சென்றுள்ளார். அப்போது குழந்தை இயந்திரத்தின் பின்னால் நின்றது தெரியாமல் மீண்டும் இயந்திரத்தை இயக்கிய போது உழவு இயந்திரத்தின் சக்கரம் குழந்தை மேல் ஏறியுள்ளது.

சம்பவ இடத்திலேயே பரிதாபமாக குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த மரண விசாரணையை மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெ.கிறிஸ்தோபர் மரண விசாரணையை மேற்கொண்டிருந்தார். சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06