உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மல்லாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கல்லாரை பகுதியை சேர்ந்த ஒரு வயதும் 8 மாதங்களுமான விஜயகாந்த் தஸ்மிலன் என்ற ஆண் குழந்தையே மேற்படி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
நேற்று நண்பகல் குறித்த குழந்தையின் தந்தை வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை இயக்கி பின்பக்கமாக கொண்டு சென்றுள்ளார். அப்போது குழந்தை இயந்திரத்தின் பின்னால் நின்றது தெரியாமல் மீண்டும் இயந்திரத்தை இயக்கிய போது உழவு இயந்திரத்தின் சக்கரம் குழந்தை மேல் ஏறியுள்ளது.
சம்பவ இடத்திலேயே பரிதாபமாக குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த மரண விசாரணையை மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெ.கிறிஸ்தோபர் மரண விசாரணையை மேற்கொண்டிருந்தார். சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM