அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையில் விரைவில் துப்பாக்கி குண்டு பாயும் என “பேஸ்புக்” வலைதளத்தில் மிரட்டல் விடுத்த இளைஞர் 3 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் பென்சில்வேனியாவை சேர்ந்த 27 வயதான ஷர்வன் ரிச்சர்ட் கிறிஸ்டி என்பவர் கடந்த ஜூன் மாதம் ‘பேஸ்புக்‘ சமூக வலைதளத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக கருத்துகள் வெளியிட்டிருந்தார்.
அதில், “உங்கள் (ட்ரம்ப்) தலையில் துப்பாக்கி குண்டு பாயும், அது விரைவில் நடக்கும் என்பதை உறுதியளிக்கிறேன் என கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து பென்சில்வேனியா பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். ஆனால் பொலிஸாரிடம் சிக்காமல் அவர் தலைமறைவாக இருந்தார்.
இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிள்ளர் ஒகியோவில் வைத்து அவரை பொலிஸார் கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்து ‘380 காலிபர்’ ரக கைத்துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கார்கள் மற்றும் துப்பாக்கிகளை திருடி அமெரிக்கா மற்றும் கனடாவில் விற்று வந்ததுள்மை தெரியவந்தது. இதைனையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM