மலையகத்தவர்கள் சிந்தும் இரத்தத்திற்கு ஜனாதிபதி பதில் கூற வேண்டும் ; போராட்டக்களத்தில் ஸ்ரீதரன் எம்.பி 

Published By: Digital Desk 4

23 Sep, 2018 | 05:48 PM
image

மலையக தோட்ட தொழிலாளர்கள் சிந்துகின்ற இரத்தத்திற்கு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதில் சொல்ல வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலை நகரில் இன்று காலை ஏற்பாடு செய்த சம்பள போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தொழிலாளர்களின் சம்பளம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருக்க வேண்டும். தொழிலாளர்களுடைய ஒரு நாள் சம்பளத்தை அதிகரிப்பதற்காகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் நாங்கள் இவ்வளவு காலமும் பட்ட துன்பங்களிலிருந்து முதலாளிமார் சுரண்டல்களிலிருந்து நாங்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த மைதானத்தில் நாங்கள் ஒன்றுக்கூடியுள்ளோம்.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானதும், ஏற்றுக்கொள்ள கூடியதுமாகும். இந்த கோரிக்கைகளை அரசாங்கம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

மலையக மக்களின் வாழ்வில் மாற்றம் பெற வேண்டும் என்றால் முதலாவதாக மக்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் பெற வேண்டும். அடிப்படை சம்பளம் 500 ரூபாயிலிரந்து 1000 ரூபாய்க்கு உயர்த்தப்பட வேண்டும் இதற்காகவே நாங்கள் ஒன்றுதிரண்டுள்ளோம்.

நாங்கள் பட்ட துயரங்களிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும். இதற்கு நாட்டின் ஜனாதிபதியும் , பிரதமரும் செவி சாய்க்க வேண்டும்.

தொழிலாளர்கள் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு, உழைப்பில் நிமிர்ந்து நிற்கின்ற மக்களாக உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை பெறுகின்ற மக்களாக தொழிலாளர்களை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் தயாராக வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58