தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக 3 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நிபந்தனையுடனான பிணையில் விடுவித்தது.
மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது , ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மேலும் சில சிறுமிகளின் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன. அந்தச் சிறுமிகளிடம் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வாக்குமூலத்தைப் பெறும் வரை ஆசிரியருக்குப் பிணை வழங்கப்படக் கூடாது என்று பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எஸ்.சோபிதன் கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.
‘சந்தேகநபருக்கு எதிரான சாட்சிகளான இரண்டு சிறுமிகளின் முழுமையான வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன. அதனால் அவரைப் பிணையில் விடுவிப்பதற்கு ஆட்சேபனையில்லை’ என்று வட்டுக்கோட்டைக் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
அத்துடன், சிறுவர் பாதுகாப்பு அதிகாரியும் பிணை வழங்குவதற்கு ஆட்சேபனையில்லை என்று மன்றுக்கு அறிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பான சட்டத்தரணியின் ஆட்சேபனை மற்றும் வழக்குத் தொடுனரான காவல்துறையினரின்; சமர்ப்பணத்தை ஆராய்ந்த மன்று, சந்தேகநபரை நிபந்தனையுடனான பிணையில் விடுவித்துக் கட்டளை வழங்கியது.
தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணை மற்றும் 50 ஆயிரம் ரூபா காசுப் பிணையில் சந்தேகநபரை விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM