இந்தியாவின் உத்ரப்பிரதேசம் அலிகார் பகுதியில் கொலை வழக்கில் பொலிஸாரால் வலை வீசி தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகளை பொலிஸார் என்கவுண்டர் செய்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களை வரவழைத்து என்கவுண்டரை வீடியோ பதிவு செய்ய அனுமதியளித்துள்ளனர்.
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரு குற்றவாளிகளும் கடந்த ஒரு மாதக்காலத்திற்குள் மட்டும் 6 கொலைகளுடன் தொடர்புபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந் நிலையில் குறித்த கொலை குற்றவாளிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த இருவரையும் மடக்கி பிடிக்க முயன்ற பொலிஸார் மீது குற்றவாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து மேலதிகமாக பொலிஸார் குவிக்கப்பட்டதோடு ஊடகவியலாளர்களும் வரவழைக்கப்பட்டனர்.
இரு கொலையாளிகளும் மறைந்திருந்து தாக்குதல் மேற்கொண்ட இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்து இருவரையும் மிகவும் சாதூரியமாக என்கவுண்டர் செய்தனர்.
பொலிஸாரின் என்கவுண்டரை வீடியோ எடுப்பதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM