இறுதிக் கட்ட யுத்த உயிரிழப்புகள் தொடர்பில் அரசுபொறுப்புக் கூற வேண்டும் -ஐ.நா  

Published By: R. Kalaichelvan

20 Sep, 2018 | 10:45 AM
image

(நியூயோர்க்கிலிருந்து எம்.பி.எம்.பைறூஸ்)

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமாகும் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதிகளை காப்பாற்றும் என நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ரெஹாம் அல் பர்ரா புலமைப் பரிசில்  ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களை  ஐ.நா. மனித உரிமை பேரவை கைவிட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். 

இது தொடர்பில் ஐ.நா. வின் நிலைப்பாடு என்ன என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில், 

இலங்கை அரசாங்கம் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், உயிரிழப்புகள் தொடர்பில் தனது பொறுப்புக்கூறலில் இருந்து விலக முடியாது. 

சிறிசேன அரசாங்கம் இது தொடர்பான விடயத்தில் ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் என நம்புகிறோம். 

இவ் விடயமாக நாம் தொடர்ந்தும் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறோம்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைக் கூட்ட விவாதம் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகிறது. 

இதன் முதல் நாளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19