கிளிநொச்சியில் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் பரப்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆராய நேற்று விசேட தொல்லியல் குழு ஆய்வில் ஈடுபட்டது
நேற்று பகல் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட குழுவினர் கிளிநொச்சியில் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் பரப்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆராய நேற்று விசேட தொல்லியல் குழு ஆய்வில் ஈடுபட்டது.
வவுனியா தொல்லியல் திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறித்த பகுதியில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது,
கடந்த 16 ஆம் திகதியன்று கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டிருந்த சிறு வீதி வளைவு உடைக்கப்பட்டமை தொடர்பில் தென்னிலங்கையில் தொல்பியல் மரபு சின்னங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக பொய்யான செய்திகள் பரப்பப்பட்டன.
குறித்த பகுதியில் 2010 ஆம் ஆண்டளவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சமாதானத்திற்கான நினைவு தூபியின் மேலதிக அழகுபடுத்தலுக்காக புராதன கற்றகள் போன்று வடிவமைக்கப்பட்ட கற்களால் வீதி சிறு வளைவுகளுடன் நான்கு பக்கங்களிலும் அமைக்கப்பட்டது.
குறித்த வளைவுகளில் நகர திட்டமிடல் அதிகார சபையினால் பூங்கா அமைப்பதற்காக ஒரு பகுதியிலும், மற்றய பகுதியில் கிளிநொச்சி பொது சந்தை அமைப்பதற்காகவும் ஏற்கனவே அகற்றப்பட்டிருந்த நிலையில், கடந்த 16 ம் திகதி மற்றய பகுதியில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வந்த பகுதியில் வடிகால் ஒன்றை அமைப்பதற்கு அகற்றப்பட்டது.
குறித்த பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் சிறிதரன் எம்.பியும் அவ்விடத்தில் பிரசன்னமாகியிருந்தார். இந்நிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உண்மைநிலையை ஆராய குறித்த பகுதிக்கு விசேட குழு வருகை தந்திருந்தது. அவ்விடத்தில் குறிப்பிட்ட தொல்பொருள் சிதைக்கப்பட்டதாக கூறப்படும் உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM