தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோருவதுடன், தமது விடுதலைக்காக சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா இந்திரன் தங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, சிறி ரெலோ அமைப்பினர், தமிழ் விருட்சம் அமைப்பு, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா, ஈரோஸ் அமைப்பினர், சிகை அலங்கரிப்போர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு தமது கருத்து;களை வெளியிட்டனர். .
பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். இவர்களைப் பாராமுகமாக அரசாங்கம் நடத்தி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமது விடுதலைக்காகப் போராடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளுக்கு சமூகத்தில் உள்ளவர்கள், ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டியது அவசியம்.
இந்த வகையிலேயே அரசியல் கட்சிகள் மற்றும் பொதுஅமைப்புக்ககள் சமூக முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி 22 ஆம் திகதி போராட்டம் நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் எதிர்வரும் 22 ஆம் திகதி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக இதற்கென அமைக்கப்பட்டுள்ள ஏற்பாட்டுக் குழவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM