அழுத்தங்களை எவ்வாறு கையாள்வது தொடர்பிலும் சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பிலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் இன்னும் பல உள்ளன என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார்.
14 ஆவது ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரை எதிர்கொள்வதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் சென்றுள்ள இலங்கை அணியானது நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் படு தோல்வியை சந்தித்தது.
இதில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியின் பின்னர் ஊடகங்களை சந்தித்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்த மெத்தியூஸ்,
திறமை குறித்து எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. எம்மிடம் திறமை இருக்கின்றது என்பதை தென்னாபிரிக்காவுடனான தொடரின்போது நாம் வெளிப்படுத்தக் காட்டினோம்.
ஆனால் அழுத்தங்களை எவ்வாறு சமாளிப்பது. சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பவை பற்றியே நாம் அதிக கவனம் செலத்த வேண்டும். இம்முறை இவை இரண்டியும் நங்கள் உரியவாறு வெளிப்படுத்தாமையே தோல்விக்கான பிரதான காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
உறுதியான மனோநிலை வேண்டும். அதற்கு விரைவாக தீர்வுகாண வேண்டும். இப்படியே நகர முடியாது. இன்னும் இரண்டு வாரங்களில் இங்கிலாந்தை எமது சொந்த மண்ணில் எதிர்கொள்ளவுள்ளோம்.
இந் நிலையில் இவ்வாறான மோசமான ஆட்டம் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM