இலங்கையை உள்ளடக்கிய இந்திய உபகண்டத்தில் கிரிக்கெட் மோகம் அதிகரித்து வருகின்ற நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியை மேலும் உற்சாகப்படுத்தும் பணியை சியெட் தொடங்கியுள்ளது. முன்னணி டயர் வர்த்தக முத்திரையான சியெட் நாட்டின் கிரிக்கெட் அணிக்குப் பின்னால் ரசிகர்களை ஒன்று திரட்டும் ஒரு உன்னதமான பணியைத் தொடங்கியுள்ளது.
சர்வதேச 20க்கு 20 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு இந்த பிரசாரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் எட்டாம் திகதி இந்தப் போட்டிகள் இந்தியாவில் தொடங்கவுள்ளன. சியெட் ஜயவேவா ஸ்ரீலங்கா எனும் தொனிப்பொருளில் தொடங்கவுள்ள இந்தப் பிரசாரம் மிகப் பெரிய அளவிலான LED டச்ஸ்கிரீன் பொருத்தப்பட்ட டிரக் வண்டியைக் கொண்டிருக்கும். 25 நாட்களுக்கு இலங்கை முழுவதும் வலம் வரவுள்ள இந்த டிரக் வண்டியில் அதி நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி ரசிகர்கள் தமது அணிக்கான வாழ்த்தினை பதிவு செய்ய முடியும்.இந்த பிரதான டிரக் வண்டிக்கு புறம்பாக இன்னொரு வண்டியும் அதை பின் தொடரும்.
அதிலும் மிகப் பெரிய LED திரை பொருத்தப்பட்டு அன்றைய தினத்தில் இடம்பெறுகின்ற விளையாட்டுப் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். இலங்கையின் பிரதான 51 நகரங்கனை ஊடறுத்து இந்த டிரக் வண்டிகள் வலம் வரவுள்ளன.
ரசிகர்கள் தமது பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பனவற்றைப் பதிவு செய்வதன் மூலம் டிஜிட்டல் திரைவழியாக அவர்கள் படம் பிடிக்கப்பட்டு அவர்களின் வாழ்த்து பதிவாகும். இவ்வாறு பிடிக்கப்படும் ரசிகர்கள் அனைவரதும் படங்கள் இலங்கையின் தேசப் பட உருவத்துக்குள் பதிவு செய்யப்பட்டு ஒட்டு மொத்த வாழ்த்தாக உருவாக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM