நயன்தாரா நடித்த அறம் படத்தை இயக்கிய இயக்குநர் கோபி நாயனார் அடுத்ததாக ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார்.இது குறித்து இயக்குநர் கோபி நாயனார் பேசுகையில்,‘ தமிழ்நாட்டிற்கு பிழைப்பிற்காக வட இந்தியா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், இங்குள்ள பூர்வ குடிகளை எப்படி தொடர்ந்து நசுக்குகிறார்கள். தமிழ் மொழியும், தமிழனும் எப்படி தங்களது அடையாளத்தை இழந்து வருகிறது என்பதை விவரிக்கிறேன்.
இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தில் கதையின் நாயகனாக ஒரு விளையாட்டு வீரனாக நடிகர் ஜெய் நடிக்கிறார். கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
படபிடிப்பு சென்னையிலும், அதன் சுற்றுப்புறப்பகுதியிலும் நடைபெறவிருக்கிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, பிரசாத் இசையமைக்கிறார்.’ என்றார்.
இந்த படம் கருப்பர் நகரம் என்ற பெயரில் வெளியான நாவலைத்தழுவி எடுக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM