பண மோசடியில் ஈடுபட்ட பெண் சிக்கினார்

Published By: R. Kalaichelvan

12 Sep, 2018 | 05:36 PM
image

கட்டார் நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி  பலரிடம் இலட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த பொல்கொல்ல பிரதேச பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் இவ்வாறு குறித்த பெண்ணிடம் பணம் பறிகொடுத்தவர்கள் கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்யும் படியும் பொலிசார்  மக்களிடம் கேட்டுக்கெண்டுள்ளனர்.

நாட்டில் பல பாகங்களிலுமுள்ள 27  நபர்களிடம்  16 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை மேற்படி நபரும் அவருடன் இணைந்த கும்பலும் சேர்ந்தே மேற்படி மோசடியைச் செய்துள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரை கைது செய்வதற்காக கட்டுகாஸ்தோடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

கண்டி ,கட்டுகஸ்தோட்டை ,மாத்தளை ,உக்குவலை, தெல்தெனிய மற்றும்  யக்கள ஆகிய பிரதேசங்களில்  வசிக்கும் 27 நபர்களிடம் இவ்வாறு பணம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. கட்டார் நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி ஆண்கள்  மற்றும் பெண்களிடம் இருந்தும் இவ்வாறு பணம் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் பெற்ற பணம் பிரதான சந்தேக நபரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக கைதுசெய்யப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதுடன் அச் சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

அதேநேரம்  இக் கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தவர்கள் இருப்பின் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யுமாரும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பொல்கொல்லை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண்ணை கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11