மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலில் வந்தார் நவாஷ்

Published By: Digital Desk 4

12 Sep, 2018 | 11:36 AM
image

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் மனைவி குல்சும் நவாஷ் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்த நீதிமன்ற அனுமதியுடன் அவரது கணவர் நவாஷ் ஷெரீப் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப் தற்போது அவென்பீல்ட் ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். அவருடன் அவரது மகள் மரியம் நவாஷ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது மனைவி குல்சும் நவாஷ் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். 68 வயதான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலுக்கு விண்ணப்பித்திருந்தார் நவாஷ் ஷெரீப்

அவரது பரோல் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு 12 மணி நேர பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, ராவல்பிண்டி சிறையில் வைகக்கப்பட்டுள்ள நவாஷ் ஷெரீப் மற்றும் மரியம் நவாஷ் மற்றும் சப்தார் ஆகியோர் லாகூரை சென்றடைந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிவியாவில் கோர விபத்து ; 30...

2025-02-18 16:23:00
news-image

பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

2025-02-18 14:44:05
news-image

சர்ச்சைக்குரிய பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு...

2025-02-18 14:59:48
news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி.. விஷத்தைச்...

2025-02-18 14:37:48
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01
news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-18 09:32:42
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32