தமிழகத்தில் விநாயகர் சிலைகளை வைப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் -தமிழிசை

Published By: Daya

11 Sep, 2018 | 02:19 PM
image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை  நீக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ .க. தலைவரான தமிழிசை சௌந்தராஜன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘தமிழகம் முழுவதும் உள்ள அனைவரும் விநாயகர் சிலையை நிறுவி விநாயகர் சதுர்த்தியை சமூக விழாவாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இது ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதி மக்களின் விழாவாக மாறி அப்பகுதி மக்கள் நடைபெறும் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், சேவை நிகழ்ச்சிகள், பூஜை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என மக்கள் விழாவாகவே மாறி வருகிறது.

ஆனால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து விநாயகர் சிலைகளை வைக்கவே முடியாது என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டே இந்துமத நடவடிக்கைகளை முடக்குவதே இன்றைய ஆட்சியாளர்களின் கவனமாக இருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக முதல்வர் உடனே தலையிட்டு தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்கிட வேண்டும்,’ என்று அந்த அறிக்கையில் தமிழிசை தெரிவித்திருக்கிறார். ’

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஹென்றி...

2023-11-30 08:17:37
news-image

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொலை செய்ய...

2023-11-30 08:00:32
news-image

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக...

2023-11-29 17:34:11
news-image

சீனாவில் பரவும் நிமோனியா: மத்திய அரசு...

2023-11-29 15:11:25
news-image

பைடனை கைவிடுகின்றனர் அமெரிக்காவின் இளம் வாக்காளர்கள்...

2023-11-29 13:01:32
news-image

இஸ்ரேலிடமிருந்து கிடைக்கும் தகவல்களையும் சந்தேகத்துடன் அணுகுங்கள்...

2023-11-29 12:02:37
news-image

உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவி...

2023-11-29 11:14:10
news-image

இந்தியாவில் உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணியில்...

2023-11-29 11:40:54
news-image

இந்தியாவில் 17 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய...

2023-11-29 10:15:11
news-image

இந்தியாவின்உத்திரகாண்ட் சுரங்க விபத்து – முதற்கட்டமாக...

2023-11-28 20:45:45
news-image

நெருங்கியவர்கள் மூலமான பாலியல் வன்முறையில் தென்கிழக்கு...

2023-11-28 21:28:22
news-image

உத்தரகாண்ட் சுரங்கம்- 41 தொழிலாளர்களை அழைத்து...

2023-11-28 16:38:28