வாழ்க்கையிலும் சித்தியடைவதற்கான அறிவினை பெற்றுக்கொள்ளக்கூடியவாறு பாடவிதானங்கள் அமைய வேண்டும் - ஜனாதிபதி

Published By: Daya

11 Sep, 2018 | 09:26 AM
image

பரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே தமது வாழ்க்கையையும் வெற்றிகொள்வதற்கான அறிவினை பெற்றுக்கொள்ளக்கூடியவாறு கல்விப் பாடவிதானங்கள் அமையப்பெற வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை கொடவாய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பகூடத்துடன் கூடிய இரண்டு மாடிக் கட்டடத்தை நேற்று மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி தெரிவித்தார். 

பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மாணவ, மாணவிகள் ஆரவாரத்துடன் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து புதிய தொழில்நுட்பகூடத்துடன் கூடிய இரண்டு மாடிக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டவாறு மாணவர்களுடன் உரையாடினார்.

அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இலவசக் கல்வியினால் அதிகளவிலான கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்கி வரும் இந்த நாட்டில் மாணவர்கள் தமது வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கான அறிவினைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பாக மிக மோசமான நிலைமையே காணப்படுகின்றது எனத் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கும் மிக மோசமான அனுபவங்களை தடுத்தல் தொடர்பாக கல்விமான்கள் முன்னோடிகளாக செயற்பட வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி பெற்றோர்களைப் போன்று ஆசிரியர்களும் இவ்விடயத்தில் கவனத்துடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினார்.

மேலும் பிள்ளைகள் பரீட்சையில் மாத்திரமன்றி வாழ்க்கையையும் வெற்றிகொள்வதற்கு கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, தென் மாகாண அமைச்சர்கள் சந்திம ராசபுத்ர, எச்.டபிள்யு. குணசேன உள்ளிட்டே மக்கள் பிரதிநிதிகளும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட அதிகளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33