கடந்த 2008 ஆம் ஆண்டு கடற்படையினரால் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளையும் கணவர்களையும் மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி கணவர்களையும் பிள்ளைகளையும் இழந்தவர்கள் இன்று பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

8 வருடங்கள் கடந்தும் இன்னும் தங்கள் பிள்ளைகளை கண்ணில் காட்டாமல் எங்கு ஒழித்துவைத்திருக்கிறார்கள். இந்த நல்லாட்சி அரசாங்கமாவது எங்களுக்கு நல்லவழியை காட்டும் என்று எண்ணி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

தெஹிவளை, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் வெளிநாடுகளுக்கு படிப்பிற்காகவும் வேலை நிமிர்த்தமும் செல்ல இருந்தவர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை பணயக்கைதிகளாக வைத்து பணம் பறித்துமுள்ளனர்.

ஆட்கொணர்வு மனு அளித்து 5 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னும் எமது பிள்ளைகளை எம்மால் காணவில்லை. நாம் இறந்தபின் எங்கள் பிள்ளைகளை வெளியில் விட்டு ஏதும் பயனில்லை.
கடந்த அரசாங்கத்தில் எமக்கு நியாயம் கிடைக்கவில்லை. இந்த நல்லாட்சி அரசாங்கமாவது எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்று எண்ணுகிறோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM