இந்தியாவை நம்பிப் பலனில்லை : சர்வதேசத்திடம் முறையிட வேண்டும் - திஸ்ஸ விதாரண 

Published By: Priyatharshan

09 Mar, 2016 | 04:33 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

மீனவர்களின் பிரச்சனைக்கு இந்தியாவை நம்பி பலன் இல்லை. சர்வதேச நீதிமன்றில் முறையிட்டு தீர்வைப்பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கையை அனைத்து வகையிலும் சூறையாடுகின்றன. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் உண்மைகளை மூடி மறைத்து போலியான விடயங்களை கூறி வருகின்றது. 

இந்தியாவை எதிர்கொள்ள முடியா விடின் ஒப்பந்தங்கள் தொடர்பில் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுப்படுகின்றனர். எமது கடற்பரப்பில் அவர்களின் படகுகள் மீன் பிடிக்கும் போது அனைத்த கடல் வளங்களும் அழிக்கப்பட்டு விடுகின்றன. 

இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்தியாவுடன் வெறுமனே பேச்சு வார்த்தை நடத்தி பலன் இல்லை அவர்கள் ஒரு போதும் நீதியை பெற்றுக் கொடுக்க மாட்டார்கள். 

 ஆகவே உடனடியாக இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட வேண்டும்.

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடலில்...

2025-12-11 17:15:58
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Maga...

2025-12-11 19:48:08
news-image

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு இரண்டு...

2025-12-11 19:41:49
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon...

2025-12-11 19:37:09
news-image

ஜேர்மன் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

2025-12-11 19:56:42
news-image

யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப...

2025-12-11 17:15:32
news-image

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவசர...

2025-12-11 19:06:32
news-image

அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின்...

2025-12-11 18:43:59
news-image

பேரிடருக்குப் பிறகு மீள்கட்டமைப்புத் தேவைகளுக்கு உலக...

2025-12-11 17:46:45
news-image

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையை...

2025-12-11 17:38:32
news-image

அனர்த்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற...

2025-12-11 16:12:33
news-image

அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் -...

2025-12-11 17:59:28