அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியின் போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமைக்காகவும் அவரது ஏனைய நடவடிக்கைக்காகவும் செரினா வில்லியம்ஸ்க்கு 17 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நவோமி ஒசாகா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்தப் போட்டியின் போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரீனா வில்லியம்ஸ் மிகவும் கோபத்துடன் நடுவரை தீட்டி தீர்த்தார்.
இந்தப் போட்டியில் அவர் மூன்று விதிமுறை மீறலில் ஈடுபட்டார்.
முதலில் அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்டம் நுணுக்கம் பற்றி விவரித்தார். ஏடிபி போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை.
இரண்டாவதாக டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தது. செரீனாவின் இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்து செரினாவின் புள்ளியை குறைத்தார்.
மேலும் மூன்றாவது தடவையாக நடுவர் ராமோஸ் ஒரு பொய்யர். என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார், என்னுடையை புள்ளியை பறித்த அவர் ஒரு திருடர் என கோபத்தில் நடுவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.
இந்நிலையில், செரினாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள அமெரிக்க டென்னிஸ் சங்கம்,
நடுவர்களை நோக்கி செரீனா கடுமையான வார்த்தைகளை பிரயோகித்ததற்காக 10 ஆயிரம் டொலர்களையும், பயிற்சியாளருக்கு சைகை காண்பித்ததற்காக 4 ஆயிரம் டொலர்களையும் ஏனைய குற்றங்களுக்காக 3 ஆயிரம் டொலர்கள் என மொத்தமாக 17 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அபராதமா விதித்துள்ளது.
இந்த தொகையானது இலங்கை நாணய மதிப்பில் 27 இலட்சம் ரூபா பெறுமதியாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM