இன்று 2 ஆம் வகை சர்க்கரை நோய் வருவதற்கு பாரம்பரிய மரபணு, மன அழுத்தம், வாழ்க்கை நடைமுறை மாற்றம், உணவு முறை மாற்றம் என பல காரணங்களைச் குறிப்பிடலாம்.
தற்போது வைத்தியத்துறையில் உள்ளவர்களே தங்களுக்கு தொழுநோய், காசநோய் போன்ற நோய்கள் கூட வரலாம். ஆனால் சர்க்கரை வியாதி மட்டும் வரவேக்கூடாது என்கிறார்கள்.
ஏனெனில் சர்க்கரை நோய் வந்துவிட்டால் தலைமுதல் உள்ளங்கால் வரை எந்த பகுதி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு வரலாம். இதற்காக அவர்கள் வருமுன் காக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். நோயாளிகளுக்கு முன்னூதரணமாக இருக்கிறார்கள்.
உணவு மற்றும் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மூன்று மாதத்திற்கு ஒரு முறை முறையான பரிசோதனை இந்த திட்டத்தை உறுதியாக கடைபிடித்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
சிலருக்கு இதனுடன் மருந்து மாத்திரைகளும் தேவைப்படலாம். அதையும் எடுத்துக் கொள்ளலாம். இரவு பதினோரு மணி முதல் காலை ஐந்து மணி வரை கட்டாயம் உறங்கவேண்டும்.
சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதை பூரணமாக குணப்படுத்த இயலாது. இதய பாதிப்பு, இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்களுடன் எப்படி வாழ்க்கையை மருந்து, மாத்திரை, கட்டுப்பாடு என கழிக்கிறோமோ அதே போல் சர்க்கரையின் அளவையும் ஆயுள் முழுவதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே வாழ்க்கை கடக்கவேண்டும்.
ஆனால் இதையெல்லாம் எமக்கு வராது என்று மனக்கட்டுப்பாடுடன் இருந்தால், அவர்களுக்கு கண் பாதிப்பு, கால் பாதிப்பு, இதயப் பாதிப்பு, இரத்த குழாய் பாதிப்பு, இரத்த நாள பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு என எல்லா பாதிப்புகளும் உறுதியாக வரக்கூடும் என எச்சரிக்கிறார்கள் வைத்தியர்கள்.
டொக்டர் எஸ் கண்ணன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM