தளபதிக்கு தெரியாமல் இரகசிய முகாமா?

23 Nov, 2015 | 12:06 PM
image

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, கடற்­ப­டைத்­த­ள­பதி கரு­ணா­கொட ஆகி­யோ­ருக்கு தெரி­யாது எவ்­வி­த­மான இர­க­சிய முகாம்­களும் இருந்­தி­ருப்­ப­தற்­கான வாய்ப்­பில்­லை­யெனத் சுட்­டிக்­காட்­டி­யுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன் முழு­மை­யான விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­பட்டு அனைத்து விட­யங்­களும் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்து ஐக்­கிய நாடுகள் சபையின் காண­மல்­போனோர் தொடர்­பான செயற்­கு­ழு­வினர் திரு­மலை கடற்­ப­டைத்­த­ளத்தில் இர­க­சிய தடுப்பு முகாம் காணப்­பட்­டமை உட்­பட அது குறித்த பல்­வேறு தக­வல்­களை வௌியிட்­டி­ருந்­தனர். இந்­நி­லையில் முன்னாள் கடற்­படைத் தள­பதி வசந்­த­க­ரு­ணா­கொட அதனை நிர­கா­ரிக்கும் வகையில் கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ள­தாக ஊட­கங்கள் தகவல் வௌியிட்­டுள்­ளன.
இந்­நி­லையில் குறித்த இர­க­சிய முகாம் தொடர்­பாக பாரா­ளு­மன்றில் முதற்­த­ட­வை­யாக கேள்­வி­யெ­ழுப்­பிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலை­வ­ரு­மான சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன் கருத்து வௌியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்தார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில்,
முதன்­மு­த­லாக பாரா­ளு­மன்றில் திரு­மலை கடற்­ப­டைத்­த­ளத்தில் இவ்­வா­றான இர­க­சிய முகா­மொன்று இருந்­தது. குறித்த முகாம் கோத்­த­பாய என பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது அல்­லது அவ்­வாறு அழைக்­கப்­பட்டு வந்­தது. கொழும்பில் கடத்­தப்­பட்ட மாண­வர்கள் அங்கு கொண்டு செல்­லப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அங்கு 700இற்கும் அதி­க­மா­ன­வர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். இதனை விட 35இற்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் தனித்­தனி வீடு­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். அவர்­க­ளு­டைய நிலைமை என்ன? அர­சாங்கம் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டு­மென கோரி­யி­ருந்தேன்.
அப்­போது அர­சாங்கம் அதனை முழு­மை­யாக நிர­க­ரித்­த­துடன் அது பொய்­யான தகவல் எனவும் பிர­சாரம் செய்­தனர். அவ்­வா­றி­ருக்­கையில் கொழும்பில் கடத்­தப்­பட்ட மாண­வர்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்த குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரி­வினர் இர­க­சிய முகாம்கள் இருந்­தன என்­ப­தையும் கடற்­ப­டைக்கு அதில் தொடர்­பி­ருப்­ப­தையும் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.
அதே­போன்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி­ராஜின் கொலை­வ­ழக்கு தொடர்பில் நடத்­தப்­பட்டு வரும் விசா­ர­ணை­க­ளிலும் கடற்­ப­டை­யி­ன­ருக்கு தொடர்­பி­ருப்­ப­தாக கூறப்­பட்­டுள்­ளது. ஆகவே இவ்­வி­ட­யங்­களை வைத்துப் பார்க்கும் போது கடந்த காலங்­களில் இடம்­பெற்ற கடத்­தல்கள், கப்பம் கோரும் சம்­பங்கள், படு­கொ­லைகள் போன்­ற­வற்றில் கடற்­ப­டை­யி­ன­ருக்கு தொடர்­பி­ருப்­பது வௌியா­கின்­றது.
இந்­நி­லையில் தான் இங்கு வரு­கை­தந்­தி­ருந்த ஐ.நா.குழு­வினர் திரு­மலை கடற்­ப­டை­மு­காமில் இர­க­சிய சித்­தி­ர­வதை முகாம் காணப்­பட்­டுள்­ளமை தொடர்பில் பல விட­யங்­களை வௌியிட்­டுள்­ளனர். தற்­போது திரு­மலை கடற்­படை முகாமில் இர­க­சிய தடுப்பு முகா­மொன்று காணப்­பட்­டி­ருந்­தது என்­பது ஏறக்­கு­றைய நிரு­ப­ன­மா­கி­யுள்­ளது.
மறு­பு­றுத்தில் முன்னாள் கடற்­ப­டைத்­த­ள­பதி வசந்த கரு­ணா­கொட இர­க­சிய முகாங்கள் இல்­லை­யென மறு­த­லித்­தாலும் அவர் புலி­களை தடுத்து வைத்­தி­ருந்­தாக கூறி­யி­ருக்­கின்றார்.எனவே திரு­மலை கடற்­படை முகாமில் தடுத்து வைக்கும் செயற்­பா­டு­களும் நடை­பெற்­றி­ருக்­கின்­றன என்­பது நிரூ­ப­ன­மா­கின்­றது.
எனவே முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ, கடற்­ப­டைத்­த­ள­பதி வசந்த கரு­ணா­கொட ஆகி­யோ­ருக்கு இவ்­வி­ட­யங்கள் அறி­யாது நடந்­தி­ருப்­ப­தற்கு எந்­த­வொரு வாய்ப்­புக்­களும் இல்லை. அவ்­வா­றி­ருக்­கையில் தொடர்ந்தும் இவ்விடயத்தை மூடிமறைப்பதற்கான காரணங்களை கண்டறிந்து கூறிக்கொண்டிருப்பதை விடுத்து உண்மைகள் கண்டறியப்படவேண்டும். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்படவேண்டும்.
வெறுமனே விடுதலைப்புலிகளை ஒழித்தவர்கள், பயங்கரவாதத்தை அழித்தவர்கள் என புகழாரம் சூட்டி அவர்களை காட்டிக்கொடுக்க மாட்டோமென அர்த்தங்கற்பிப்பதை விடுத்து முழுமையான விசாரணையொன்று முன்னெடுக்கப்படுவது அவசியமென்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39