மாத்தறை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் கை கோர்த்த அமெரிக்க தூதரகம்

Published By: Digital Desk 7

04 Sep, 2018 | 02:59 PM
image

அமெரிக்கன் கோர்னர் அங்குரார்ப்பணத்தின் நிமித்தம் மாத்தறை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் அமெரிக்கத் தூதரகம் இணைந்து கொண்டுள்ளது.

மாத்தறையில் புதிய அமெரிக்கன் கோர்னர் ஒன்றைத் திறப்பது தொடர்பில் அமெரிக்கத் தூதரகத்துக்கும் மாத்தறை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்திற்கும் இடையில் ஒகஸ்ட் 30ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

அமெரிக்கத் தூதரகத்தின் பதில் பொது அலுவல்கள் அதிகாரி நேன்ஸி வென்ஹோர்ன் மற்றும் சம்மேளனத்தின் தலைவர் மேத்தா விதானகமாச்சி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இல.149 ஹக்மன வீதி மாத்தறை என்ற முகவரியில் உள்ள மாத்தறை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன கட்டடத்தின் கீழ் மாடியில் அமைந்துள்ள அமெரிக்கன் கோர்னர் தென் மாகாணத்தின் உள்ளவர்களுக்கு இலவச திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கும்.

ஆங்கில வகுப்புக்கள் குறியிட்டு முறை மற்றும் கணனி திறன் தலைமைத்துவம் மற்றும் பொது பேச்சுப் பயிற்சிகள் பல்வேறான படங்களை திரையிடுதல் மற்றும் கலாசார சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றை உள்ளடக்கியதாக இதன் செயற்றிட்டங்கள் அமைந்திருக்கும்.

“தென் மாகாண மக்களுடன் எமது உறகளைக் கட்டியெழுப்புவதற்கான அமெரிக்க தூதரகத்தின் உறுதிப்பாட்டை இப் புதிய அமெரிக்கன் கோர்னர் பிரிதிநிதித்துவப்படுகிறது” 

எமது இலவச திட்டங்கள் இந்த பிராந்தியத்தில் பொருளாதார வாய்ப்புக்களை விஸ்தரிப்பதுடன் இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளையும் வலுப்படுத்தும்” என்று வென்ஹோர்ன் தெரிவித்தார்.

பல்வேறுபட்ட பின்னணிகளைச் சேர்ந்த அதே போல் வெவ்வேறு வயதுடைய மக்களை கவர்ந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தகவல் மையத்தின் (iHub) 2018 மார்ச் மாத அங்குரார்ப்பண வெற்றியின் தொடர்ச்சியாகவே அமெரிக்கன் கோனரின் பிரவேசமும் அமைந்துள்ளது.

தற்போதைய நிகழ்ச்சி திட்டங்களானது பொதுப் பேச்சு மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 

எதிர் வரும் மாதங்களில் புதிய அமெரிக்கன் கோர்னர் திறக்கப்படும் வரை iHub  தொடர்ந்தும்  செயற்படும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால்...

2025-03-19 11:35:02
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20