73 வயது நபரொருவருக்கு மேற்கொள்ளப்பட்ட இருதய சத்திர சிகிச்சையின் போது வைத்தியர்கள் தவறுதலாக ஊசியொன்றை அந்நபரின் மார்புக்குள் வைத்து தைத்ததால் அந்நபர் கடும் வேதனையை அனுபவித்து மரணமான அதிர்ச்சியூட்டும் சம்பவம் அமெரிக்க தென்னஸி மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
லபாயெட் எனும் இடத்தைச் சேர்ந்த ஜோன் பேர்ன்ஸ் ஜோன்ஸன் என்ற நபரே சத்திரசிகிச்சை நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தவறால் கடும் வேதனையை அனுபவித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
நஷ்வில்லேயிலுள்ள றைஸ்டார் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பூர்த்தியடைந்ததற்கு 9 மணித்தியாலங்களின் பின்னரே, சத்திர சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியரான ஸ்ரீகுமார் சுப்பிரமணியன் சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட ஊசிகளில் ஒன்று காணாமல் போயுள்ளதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து அவரும் அவரது வைத்தியக் குழுவினரும் ஜோன்ஸனின் இருதயப் பகுதியில் திரும்பவும் மேலதிகமாக 3 மணி நேர சத்திர சிகிச்சையை முன்னெடுத்து அவரது மார்பில் வைத்து தைக்கப்பட்ட ஊசியை மீட்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களுக்கு அந்த ஊசியைக் கண்டுபிடித்து அகற்றுவது சாத்தியமாகவில்லை.
இந்நிலையில் முயற்சியைக் கைவிட்டு அவரது மார்புப் பகுதியை மீண்டும் வைத்தியர்கள் தைத்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து 30 நாட்கள் கடும் வேதனையையும் துன்பத்தையும் அனுபவித்த ஜோன்ஸன் இறுதியில் மரணமானார்.
இதனையடுத்து ஜோன்ஸனின் குடும்பத்தினர் றைஸ்டார் வைத்தியசாலைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM