செல்வமும் சித்தார்தனும் துரோகத்திற்கு உடந்தை : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Published By: Vishnu

04 Sep, 2018 | 10:10 AM
image

(ரி.விரூஷன்)

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் பங்­கா­ளி­க­ளாக இருந்­து­கொண்டு அதில் சம்பந்­தனும், சுமந்­தி­ரனும் செய்­கின்ற துரோ­கங்­க­ளுக்கு துணை போகின்ற ரெலோ, புளொட் ஆகிய கட்­சி­களின் தலை­மைகள், தற்­போது தமக்கு இத்­த­கைய துரோ­கத்தில் தொடர்­பில்லை என கூறி வில­கு­வதை தமிழ் மக்கள் அனு­ம­திக்க மாட்­டார்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தெரி­வித்­துள்ளார். 

கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் கூறி­யதை அது  கூட்­ட­மைப்பின் கருத்து இல்லை, அவ­ரது தனிப்­பட்ட கருத்து எனக் கூறு­வது உலக அர­சி­ய­லிலே இதுவே முதல் முறை எனவும் அவர் கூறி­யுள்ளார்.

அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

தற்­போது சமஷ்டி தேவை­யில்லை என சுமந்­திரன் கூறிய கருத்து தொடர்­பாக கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­க­ளிடம் வீர­கே­சரி பத்­தி­ரிகை கருத்து கேட்டு செய்தி வெளி­யிட்­டி­ருக்­கி­றது. அதில் புளொட் அமைப்பின் தலைவர் சித்­தார்த்தன் சுமந்­திரன் கூறிய கருத்து அவ­ரது தனிப்­பட்ட கருத்து என தெரி­வித்­துள்ளார். 

உண்­மையில் சித்­தார்த்தன் தற்­போது கூறு­வது தான் சித்­தார்த்­தனின் தனிப்­பட்ட கருத்­தாகும். எம்.ஏ.சுமந்­திரன் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர். அவர் கூறும் கருத்து கூட்­ட­மைப்பின் கருத்­தா­கவே அமையும்.

இதே சித்­தார்த்­தனே புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான குழுக்­களில் அதி­கார பகிர்வு குழுவின் தலை­வ­ராக இருக்­கின்றார். அதே நேரம் தமிழ் மக்கள் பேர­வை­யிலும் உறுப்­பி­ன­ரா­க இருக்­கின்றார். இந்­நி­லையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஒற்­றை­யாட்­சியை வலி­யு­றுத்­து­கின்ற புதிய அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால அறிக்­கைக்கு ஆத­ரவு கேட்டு அதற்­கான மக்­களின் ஆணை ­யாக உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் போட்­டி­யிட்ட போது அதற்கு ஆத­ர­வாக வாக்­கு­களைக் கேட்டார். 

ஏனெனில் அப்­போது சுமந்­தி­ரனும், சம்பந்­தனும் சமஷ்டி தேவை­யில்லை என்­பதை வெளிப்­ப­டை­யாகக் கூற­வில்லை. எனவே மக்­க­ளுக்கு இந்த உண்­மைகள் தெரி­யாது என்ற நம்­பிக்­கையில் அப்­போது அவர்­க­ளோடு ஒற்­று­மை­யாக மக்­க­ளிடம் வாக்கு கேட்­டார்கள். ஆனால் இப்­போது உண்மை அம்­ப­ல­மா­கி­யுள்ள நிலையில் என்ன செய்­வ­தென்று தெரி­யாத தர்­ம­சங்­க­ட­மான நிலையில் இருக்­கி­றார்கள்.

சித்­தார்த்தன் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் யார்? அதில் ஒரு சிறிய பங்­காளிக் கட்­சியின் தலைவர் மாத்­தி­ரமே. இந்­நி­லையில் தனது தரப்பு தான் வாக்கு கேட்ட மக்­க­ளிடம் செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்டு விட்­டதை உணர்ந்து அம் மக்­க­ளிடம் இருந்து தப்­பிக்க இப்­போது அது சுமந்­தி­ரனின் தனிப்­பட்ட கருத்து என்­கிறார்.

இதேபோலவே ரெலோ அமைப்பின் தலை 

வர் செல்வம் அடைக்­க­ல­நா­தனும். பாரா­ளு­மன்ற குழுக்­களின் தலைமைப் பத­வியை ஒற்­றை­யாட்­சிக்கு இணங்­கி­ய­மை­யா­லேயே பெற்­றுக்­கொண்­டுள்ளார். ஆகவே இவர்கள் அனை­வரும் இணைந்து எல்லாம் தெரிந்தே இம் மக்­களை ஏமாற்றி வரு­கின்­றார்கள். 

இவர்கள் தமிழ் தேசிய வாதத்தை தமிழ் அர­சி­யலில் இருந்து முற்று முழு­தா­கவே நீக்­கு­கின்ற செயற்­பாட்டை நேர்த்­தி­யாக செய்­கின்­றார்கள். இந்­நி­லையில் தற்­போது இந்த உண்­மைகள் வெளி­வர தொடங்­கி­விட்ட நிலை­யிலும், இன்னும் பல உண்­மைகள் வெளி­வர இருக்­கின்ற நிலை­யிலும் இவற்­றுக்கு எல்லாம் காரணம் வெறு­மனே சுமந்­தி­ரனும் சம்பந்­தனும் மாத்­தி­ரமே என அவர்கள் மீது மாத்­திரம் பழியைப் போட்­டு­விட்டு தாம் வில­கிட பார்க்­கின்­றார்கள்.

இவ்­வா­றான நிலையில் இவர்கள் இரு­வரும் இத்­த­கைய துரோகத் தனங்களை செய்வதற்கு துணைபோனவர்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைமைகளேயாவர். எனவே தற்போது இதற்கும் தமக்கு ம் சம்பந்தமில்லை எனக் கூறி அதிலிருந்து தாம் தப்பித்துக்கொள்ள பார்க்கும் புளொட் சித்தார்த்தன் மற்றும் ரெலோ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58