உலக மகளிர் தினத்தை வேண்டுமானால் நாம் எளிமையாகக் கொண்டாடலாம். ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும் அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.
18ஆ-ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளைச் செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவமும் சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது.
இந்த நிலையில்தான் 1857ஆ-ம் ஆண்டின் நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதும் படுகாயமடைந்து நட க்கமுடியாத நிலைக்கு உள்ளானதும் நிகழ்ந்தது. இதனால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க நிலக்கரிச்சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிருக்கு பணி வாய்ப்பு கிட்டியது. இந்த சந்தர்ப்பம்தான் அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணியாற்ற முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்தது. ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் வேலை செய்ய முடியும் என்று பெண் சமுதாயமே அப்போதுதான் புரிந்துகொண்டது.
எது எப்படியிருந்தாலும், வேலை பார்க் கும் இடங்களில் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்புக் கிடைத்ததே தவிர ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. (அது இன்றுவரை பல இடங்களில் தொடர்வது மற்றொரு பிரச்சினை). இதனால் பெண்கள் மனக்குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை.
அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூ யோர்க் இங்கு நெசவுத்தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
1857-இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கிய பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புக்கள் தோன்றின.
இதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண் தொழிலாளர்கள் 1857ஆ-ம் ஆண்டு மார்ச் 8ஆ-ம் திகதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்திசெய்யும் ஆலைகளில் பணியாற்றிய பெண்கள் தான் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆலை உரிமையாளர்கள் இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் அடக்கினர். வெற்றிபெற்றதாக பகல் கனவும் கண்டனர். ஆனால் அந்த பகல் கனவு நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை.
அடக்கி வைத்தால் அடங்கிப் போவது அடிமைத்தனம் என்று பெண் தொழிலா ளர்கள் 1907ஆ-ம் ஆண்டில் மீண்டும் போரா ட்ட களத்தில் குதித்து சம உரிமை, சம ஊதியம் கோரினர். இதைத்தொடர்ந்து டென் மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உல கின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புக்கள் கலந்துக்கொண்டு தங்களது ஒற்றுமையை உலகுக்கு காட்டின.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜேர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். அந்த தீர்மானத்தின் முக்கிய சாராம்சமாக மார்ச் மாதம் 8-ஆம் திகதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார். பெண்களை அடக்கியாள நினைத்த ஆண் சமுதாயம் இதற்கு ஒப்புக்கொள்ளுமா அல்லது இந்த தீர்மானம் நிறைவேற வழி ஏற்படுத்துமா... பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேற முடியாமல் போனது.
இதற்கிடையே பெண் தொழிலாளர் அமைப்பினர் ஆங்காங்கே உரிமைக்குரல் எழுப்பத் தொடங்கியிருந்தனர். 1920-ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட் டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண் ட்ரா கெலன்ரா கலந்துகொண்டார்.
அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8-ஆம் திகதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் திகதியை நாம் மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
மார்ச் 8ஆ-ம் திகதியை உலக மகளிர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். வீட்டுக்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்துகொண்டிருக்கிறது என்றால் அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும். முதலில் அனைத்து மகளிருக்கும் கூடலின் சார்பில் மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.மார்ச் 8-இல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?
மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.சர்வதேச மகளிர் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!
உலக மகளிர் தினம் உருவான பின்னணியை சற்று பார்த்தால் இப்போதுதான் அவர்கள் சிந்திக்கத் துவங்கியிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. பெண் அடிமைத்தனம் எங்கு இருக்கின்றதோ அங்குதான் பெண் சுதந்திரம் மற்றும் பெண்கள் எழுச்சி தேவைப்படுகிறது. பெண்கள் முன் னேற்றம் மற்றும் சம உரிமைமையகமாக வைத்து கி.பி. 1909இ-ல் அமெரிக்க சோஷ லிஸ்ட் கட்சியினர் முதல் முதலாக மகளிர் தினத்தை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி கொண்டாடினர்.
மேற்கத்திய நாடுகள் உலகறிய தாங்கள்தான் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம் என்கிறார்கள். மகளிர் அமைப்புகள் பெண்கள் சம உரிமைக்காக போர்க்கொடி ஏந்தி போராடி வருகிறார்கள். இத்தகைய நிகழ்வுகளாலும், போராட்டங் களாலும், மகளிர் அமைப்புக்களின் செயல்களாலும் பெண்சமுதாயம் முன்னேற்றமடைந்துவிட்டதா? பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருக்கின்றனவா? என்றால் இல்லை என்றே கூறலாம்.
குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்வதில் ஆண்களுக்கு சற்று அதிகமான கடமை இருப்பது போன்று இல்லற வாழ்க்கையில் பெண்கள் ஆண்களைவிட சற்று அதிகமான பொறுப்புகளை ஏற்றாகவேண்டியது நியதி. குழந்தை வளர்ப்பில் அதிகம் பங்கெடுத்துக்கொள்வது பெண்கள்தான். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின் ஓர் பெண் இருக்கிறாள் தாயகவோ, மனைவியாகவோ அல்லது சகோதரியாகவோ அல்லது மகளாகவோ.
சம உரிமை பேசும் மேற்கத்திய நாடுக ளில் பெண் எழுச்சி ஏற்பட்டதன் விளைவு கருப்பைச் சுதந்திரம் அதிகமாகி இல்லறம் என்ற முறை தகர்க்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் காப்பகங்கள் அதிகரிக்கின்றன. குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு வருடத்திற்குள் குழந்தைகளை காப்பகத் தில் சேர்த்துவிடுகிறார்கள். பெற்றோர்க ளின் பாசம், பரிவு, அன்பு, அரவணைப்பு கிடைக்காமல் குழந்தைகள் வளர்கின்றன. பின்விளைவு முதியோர் காப்பகங்களும் மேற்கத்திய நாடுகளில் அதிகமாக உருவாகின்றன. இந்த நிலை மேற்கத்திய நாடுக ளில் மட்டும் என்றில்லை. அதன் சாயலை நம் நாடுகளிலும் காணலாம். இவர்களின் இவ்வாறான முன்னேற்றம் நமக்குத் தேவையில்லை.
கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவத ற்கு அடுப்பூதும் பெண்கள் இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணிதிரண்ட னர்.
புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி 'இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைதுசெய்வேன் எனவும் அறிவித்தான்.
ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்துென்றது!
அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைதுசெய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பா ளர்கள் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.
இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்கு சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப்படுத்தினான். இயலாது போகவும் அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!
தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜேர்மனி, ஆஸ்திரியா டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்துகொடுக் கத் தொடங்கியது.
இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சம யம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
பிரான்ஸில் புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக் குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848-ஆம் ஆண்டு மார்ச் 8ஆ-ம் நாளா கும்! அந்த மார்ச் 8ஆ-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.
இன்று மகளிர் தினம். 'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்ற பாரதியாருடைய வாக்கை பொன்னாக்கும் வகையில் இன் றைக்கு மகளிர் எல்லாத் துறைகளிலும் முன் னேறி மங்கையர் இனத்துக்கே பெருமை சேர்க்கிறார்கள்.
ஆனால் எவ்வளவுதான் முன்னேறினாலும் இன்றும் பெண்களுக்கு நடக்கும் கொடுமை கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்னமும் பெண் குழந்தைகளைக் கொல் லும் அவலம் இருந்து கொண்டுதான் இருக் கிறது.
21 ஆம் நூற்றாண்டு பெண் சுதந்திரம் பெண்களுக்கு இடஒதுக்கீடு பற்றி இப்போது நாம் விவாதித்துக் கொண்டிருந்தாலும் தங்க ளுக்கான அடிப் படை உரிமைகள் கூட கிடைக்காமல் எத்தனையோ பெண்கள் இரு க்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM