தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகம் திறப்பு ; விக்னேஸ்வரனின் அடுத்த நகர்வு என்ன ?

Published By: Priyatharshan

01 Sep, 2018 | 06:55 AM
image

தமிழ் மக்கள் பேரவையின் புதிய அலுவலகம் திறப்பும் 12 ஆவது கூட்டத் தொடரும் பெரும் பரபரப்புக்கள் மற்றும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழில் நடைபெற்றது.

யாழ் பலாலி வீதி கந்தர்மடச் சந்தியில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரவையின் கூட்டமும் இறைவணக்கத்துடன் மதத் தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்றது. 

பேரவையின் கடந்த கூட்டங்களுக்கு ஊடகங்களுக்கு அனுமதியளிக்காத நிலையில் இன்றைய கூட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. அதுவும் கூட்ட ஆரம்பத்தில் முதலமைச்சரின் உரையினைப் பதிவு செய்வதற்கு மட்டுமே அந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இதன் பின்னர் ஊடகவியியலாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். ஆனாலும் கூட்டம் முடிவைடைய ஊடக சந்திப்பொன்றை நடத்துவதாகவும் ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தருமான வி.பி.சிவநாதன், யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் முன்னாள் தலைவர் கேசவன் ஆகியோர் இணைந்து இந்த ஊடக சந்திப்பை நடாத்தியிருந்தனர்.  

இச் சந்திப்பின் போது கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களின் சாரம்சங்களை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். அதாவது இளைஞர் மாநாடொன்றை நடத்ததுவது தொடர்பிலும் ஜெனிவா அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் அந்த அமர்வில் தமிழ்த் தரப்புக்களின் நிலைப்பாடுகள் என்ன என்பது தொடர்பிலுமே அதிகம் பேசப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

இதே வேளை கூட்ட ஆரம்பத்தின் போது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அரசியலில் இருந்து ஒதுங்குவது, புதிய கட்சியை ஆரம்பிப்பது, வேறு கட்சியில் இணைவது, தாயகத்திலும் புலத்திலும் உள்ள மக்களை இணைத்துக் கொண்டு தமிழ் மக்களய் பேரவை போன்று பொது அமைப்பாக இயங்குவது என்று தனக்கு தற்போதுள்ள நான்கு தெரிவுகள் தொடர்பில் பேசியிருந்தார்.

அந்த விடயம் குறித்தும் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அதில் முதலமைச்சர் ஒதுங்குவதனையோ பேரவை போன்று பொது அமைப்பில் மாத்திரம் தொடர்வதனையோ பலரும் விரும்பவில்லை. 

அதனை விடுத்து தனிக்கட்சியா வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்தே விரிவாக ஆராயப்பட்டது. ஆனாலும் முதல்வரின் முடிவே இறுதியானது என்று தீர்மானிக்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது எனவும் அவர்கள் கூறினர்.

மேலும் ஜெனிவா அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜெனிவாவில் தமிழ்ர்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பிலும் அங்கு தமிழர் தரப்பாக புலத்திலும் தாயகத்திலும் இருக்கின்ற தரப்புக்களை இணைத்துக் கொண்டு செயற்படுவதற்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47