யாழ்.வட்டுக்கோட்டையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் தற்போது குறைந்துள்ளதாக வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.இதேவேளை சமிபகாலமாக வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற குள்ள மனிதர்களின் அட்டகாசம் குறைந்துள்ளதாக அப் பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர்.
வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.அதன் போது , வடக்கில் இடம்பெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வடமாகாண சட்டம் ஒழுங்கு அமைச்சர் எனும் ரீதியில் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானத்தை உறுப்பினர் சபா.குகதாஸ் முன் மொழிந்தார்.
குறித்த தீர்மானத்தை சபையில் முன் மொழிந்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ,
கடந்த ஒரு மாத கால பகுதிக்கு மேலாக வட்டுக்கோட்டை , அராலி , சங்கரத்தை , துணைவி , சண்டிலிப்பாய் , சீரணி , மாசியப்பிட்டி , ஆனைக்கோட்டை, நவாலி , மானிப்பாய் போன்ற இடங்களில் உள்ளே வீடுகளுக்கு இரவு வேளைகளில் முகத்தை மூடி கட்டியவாறு மக்களை அச்சுறுத்திய இனம் தெரியாத நபர்கள், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பி செல்வதுடன் வீடுகளுக்கு கல் வீச்சு தாக்குதலையும் மேற்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து இவ்வாறு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலில் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இத்தகைய செயற்பாடுகளுக்கு பின்னணியில் அரச இயந்திரத்துடன் சேர்ந்தியங்கும் சிவில் உடை தரித்த நபர்கள் இருந்தனர். அவர்களை நாம் அடையாளம் கண்டு , அவர்கள் தொடர்பிலான விபரங்களை வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கையளித்தோம்.
அதன் பின்னர் ஒரு சில நாட்களில் குறித்த சிவில் உடை தரித்தவர்கள் அப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்நிலையில் தற்போது குள்ள மனிதர்களின் நடமாட்டம் ஓய்ந்துள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM