காத்தான்குடியில் பாடசாலை மீது தாக்குதல்

Published By: Daya

30 Aug, 2018 | 12:40 PM
image

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலயத்தின் மீது இனந்தெரியாதோர் இன்று மேற்கொண்ட தாக்குதலில் பாடசாலைக்குச் சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வழமைபோன்று புதன்கிழமை இயங்கிய பாடசாலை நேற்று பிற்பகல் மூடப்பட்ட பின்னர் வியாழக்கிழமை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டபொழுது அதன்மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரிய வந்ததனை அடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த தாக்குதல் சம்பவத்தினால் பாடசாலையின் ஜன்னல் கண்ணாடிகள் நொருங்கியுள்ளதோடு தளபாடங்கள் உட்பட இன்னும் பல உடமைகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதாக பாடசாலை நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் குறித்த பாடசாலையை அண்டியுள்ள சி.டி.வி காணொளிக் கெமரா பதிவுகள் மூலமும் மற்றும் அக்கம்பக்கத்திலுள்ளோர் ஆகியோரிடமும் சம்பவத்தின் தகவல்கள் பற்றி அறிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது காத்தான்குடியில் பழைமை வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான காத்தான்குடி 5 அல்ஹிறா வித்தியாலயத்திலிருந்து ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்னர் வேறாகப் பிரிக்கப்பட்ட கனிஷ்ட வித்தியாலயமாகும். ஐந்தாந் தரம் வரை இங்கு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43