இலங்கை அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் சபையும் வடகிழக்கு மகாணங்களை உள்ளடக்கிய எட்டு மாவட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை விரைவில் வழங்குமாறு வலியுறுத்தி இன்று காலை திருக்கோவிலில் கவனயீர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்தனர்.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இடம்பெற்ற இந்த பேரணியானது, தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை முன்னெடுக்கப்பட்டது
இப் பேரணியில் கலந்துகொண்டாவர்கள், அலுவலகத்தின் ஊடாக எந்தவொரு நன்மையும் இல்லை. தொடர்ந்தும் எங்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் ஜனாதிபதியும், நல்லாட்சி அரசும் ஈடுபடாது காணாமல்போன எமது கணவன், பிள்ளைகள், உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா?அல்லது இல்லாது போனதற்கான காரணங்களை விரைவில் வெளியிடுவதுடன் இந்த கண்ணீர் போராட்டத்திற்கான முடிவையும் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டே குறித்த பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM