இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டித் தொடர் நாளை சவுத்தாம்டனில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு 20 போட்டித் தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இடம்பெற்ற ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது.
இதனையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்ட வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றயீட்டி இந்திய அணியை தலை குணிய வைத்தது.
அதன் பின்னர் டிரென்ட் பிரிட்ஜில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு கடிவாளமிட்டு 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இந் நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் நான்காவது டெஸட் போட்டித் தொடர் நாளை சவுத்தாம்டனில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித் தொடரில் இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிக் காட்டி டெஸ்ட் தொடரை சமன் செய்யுமா? அல்லது தொடரை இங்கிலாந்திடம் பறிகொடுக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
கடந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தியதன் காரணமாக நாளை ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் பயிற்சிப் போட்டியின் போது அஸ்வீனுக்கு உபாதை ஏற்பட்டுள்ளதனால் அவர் நாளை களமிறங்குவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இங்கிலாந்து அணியை பொருத்தவரை இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற வேட்கையுடனும் அவ்வாறு முடியாமல் போகும் பட்சத்தில் போட்டியை சமன் செய்தாலும் அதிர்ஷ்டம் இங்கிலாந்து வசமே.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM