தனது மூளையிலிருந்தக் கட்டியை அகற்றும் நேரத்தில் விசித்திரமாக நடந்து கொண்ட யுவதி..!!

Published By: J.G.Stephan

27 Aug, 2018 | 04:22 PM
image

தனது மூளையிலிருந்த கட்­டியை அகற்ற மருத்­து­வர்கள் 9 மணி நேர சிக்கல் மிக்க அறுவைச் சிகிச்­சையை மேற்­கொண்டபோது பெண்­ணொ­ருவர் விழித்­தி­ருந்­த­வாறு பாடல்­களைப் பாடி­ய­வாறும் நகைச்­சுவைக் கதை­களைக் கூறி­ய­வாறும் இருப்­பதை வெளிப்­ப­டுத்தும் வியப்­பூட்டும் காணொளிக் காட்­சி­யொன்று அவ­ருக்கு சிகிச்­சை­ய­ளித்த மருத்­து­வர்­களால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

ஸ்கொட் லாந்தின் கிளா ஸ்கோ பிராந்­தி­யத்தைச் சேர்ந்த பாட­சாலை ஆசி­ரி­யையும் நகைச்­சுவைக் கலை­ஞ­ருமான சாரா மே பிலோவே (35 வயது) இவ்­வாறு தனது மூளையில் அறுவைச் சிகிச்சை மேற்­கொள்­ளப்­படும்போது புன்­ன­கை­யுடன் பாடிக் கொண்டும் நகைச்­சுவைக் கதை­களை கூறிக் கொண்டும் இருந்­துள்ளார்.

அவர் பயிற்சி பெற்ற பாடகி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அவர் கடந்த வருடம் டிசம் பர் மாதம் சுக­வீ­ன­முற்ற நிலையில் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டுசெல்­லப்­பட்ட போதே அவ­ருக்கு மேற்­படி நோய் ஏற்­பட்­டி­ருப்­பது அடை­யாளம் காணப்­பட்­டது.

இந்த சத்­தி­ர­சி­கிச்­சையின் போது சாரா­வுக்குத் தெரி­யாமல் கடந்த 15 வருட கால­மாக அவ­ரது தலையில் விருத்­தி­ய­டைந்­தி­ருந்த கட்­டியின் 85 சத­வீ­த­மான பகுதி அகற்­றப்­பட்­டுள்­ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right