(இரோஷா வேலு)
அக்கரைப்பற்று பகுதிகளின் வீதிகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தகளை பெற்றுக்கொண்ட ஒருவரிடம் அந்த ஒப்பந்தங்களுக்கான நிதியை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்காக இலஞ்சம் பெற்றுக்கொண்ட அபிவிருத்தி அதிகாரியொருவரை நேற்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச சபையில் அபிவிருத்தி அதிகாரியாக கடமையாற்றும் நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் அக்கரைப்பற்று பகுதிகளில் வீதிகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்ட ஒருவரிடம் அந்த ஒப்பந்தங்களுக்கா நிதியை விரைவாக பிரதேச சபையிலிருந்து பெற்றுத் தருவதற்காக 60,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளார்.
இதில் 15 ஆயிரம் ரூபாவை முதலே பெற்றுக்கொண்ட இவர் இன்று அக்கரைப்பற்று சாகமபார என்ற பகுதியில் அமைந்திருக்கும் முறைப்பாட்டாளரின் வர்த்த நிலையத்தில் வைத்து மிகுதி 45 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொள்ள முயற்சித்த வேளையில் ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
இவ்வாறு இன்று காலை 9.57 மணியளவில் கைதுசெய்யப்பட்டவரை தொடர் விசாரணைகளுக்குட்படுத்தியுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM