சீனாவிடமிருந்து கடன்பெறுமாறு எந்த அழுத்தமும் இல்லை - இலங்கையின் தூதுவர்

Published By: Rajeeban

23 Aug, 2018 | 11:36 AM
image

சீனாவிடமிருந்து கடன்பெறுமாறு இலங்கைக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என  சீனாவிற்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

சீனாவின் குளோபல் டைம்ஸிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முதலீடுகளையும் கடன்களையும் சீனாவிடமிருந்து பெறுமாறு இலங்கைக்கு எந்த அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள தூதுவர் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் அந்த நாட்டுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பை பேண விரும்புகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அபிவிருத்தி திட்டங்களிற்கான கடன்களை தான கோரியது என்பதை முக்கியமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

கடன்களை பெற்றுக்கொள்ளுமாறு எங்களிற்கு எந்த அழுத்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான சீனாவின் நிதியுதவி கூட இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்தே கிடைத்தது என கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்த நிறுவனங்களையோ அல்லது சீனாவையோ குறைசொல்வது தவறு  எனவும் தெரிவித்துள்ள தூதுவர் துறைமுகம் தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கமே எடுத்ததது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் முடிவுகள் காரணமாக ஏதாவது பிழையேற்பட்டிருந்தால் அதற்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு எனவும் சீனாவிற்கான தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் சீனாவின் அதிகரித்த பங்களிப்பை இலங்கை எதிர்பார்க்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07