வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியை பலப்படுத்தவும், வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கும் கட்சி பேதங்களை கடந்து சகல கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் செயலணி கூட்டத்திற்கு அழைத்துள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்தார்.
மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை துரித ப்படுத்தும் நோக்கில் வடகிழக்கு மாகாணங்களுக்கான ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளோம்.
அந்த செயலணியின் கூட்டம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது. இதில் கட்சி பேதங்களை கடந்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துள்ளோம். அந்தவகையில் இந்த ஜனாதிபதி செயலணியானது வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை துரிதப்பபடுத்துவதை நோக்கமாக கொண்டது.
இந்த செயலணி ஊடாக கொடுக்கப்படும் பணம் சரியான முறையில் சரியான செயற்றிட்டங்களுக்கான செலவிடப்படுகிறதா? என்பதை நாங்கள் அவதானிப்போம்.
அந்த கடமை அழைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உண்டு. அவர்கள் ஜனாதிபதி செயலணியை பலப்படுத்தவேண்டும். மேலும் வடமாகாணத்தில் பல்வேறான பிரச்சினைகள் உள்ளன. அவை வடமாகாணத்திற்கு மட்டும் உரியவை அல்ல.
உதாரணமாக மதுபான பாவனை, போதைபொருள் பாவனை போன்றன இலங்கை முழுவதும் இன்று இருக்கின்றது. குறிப்பாக இலங்கை ஒரு தீவு என்பதால் போதைபொருள் வியாபாரிகளுக்கு இந்த நாட்டுக்குள் போதை பொருட்களை கொண்டுவருது சுலபமாக உள்ளது.
குறித்த நபர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து தங்களுடைய வியாபாரத்தை நடத்துகிறார்கள். அதனை தடுப்பதற்கு பொலிஸாரும், முப்படையினரும் பல முயற்சிளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.
போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு இந்த நாட்டில் உச்சபட்ச தண்டணை வழங்க நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். அது மரண தண்டணையாக இருந்தாலும் அதனை வழங்க தயாராக இருக்கிறேன்.
அண்மையில் மரண தண்டணை விதிக்கப்பட்டவர்களுடைய பெயர் பட்டியல் எனக்கு கிடைத்துள்ளது. அதில் 5 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக உள்ளார்கள்.
மேலும் குறித்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவர் ஒரு பெண்மணி, இவர்களுக்கு எதிராக சட்டத்தை உச்சபட்சமாக நடைமுறைப்படுத்த நான் தயாராகவே இருக்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM