காதலன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து காதலியும் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று வவுனியா செட்டிக்குளத்தில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று புதன் கிழமை மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
செட்டிக்குளம் மெனிக்பாம் யுனிட்-2 இல் வசித்து வந்த 24 வயதுடைய கிருஸ்ணபிள்னை தினேஸ் என்ற இளைஞனே இவ்வாறு நேற்று மதியம் அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
இந்த தகவலையறிந்த குறித்த இளைஞனின் காதலி நேற்று மாலை தற்கொலைக்கு முயன்ற சமயத்தில் அயலவர்களினால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM