மகாவலி அதிகாரசபை முல்லைத்தீவு மாவட்டத்தில் அடாத்தாக குடியேறியுள்ள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை வழங்கியதா? என்பது தொடர்பில் நான் எதனையும் அறியவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் அதனை நான் தடுத்து நிறுத்துவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நானும் எதிர்கட்சியின் தலைவர் இரா.சம்மந்தனும் ஜனாதிபதியான உங்களை சந்தித்தபோது மகாவலியூடாக தண்ணீரை கொண்டுவருவதற்கு முன்னர் சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றாதீர்கள் என கேட்டிருந்தோம்.
எங்களுடைய மக்களுக்கு சொந்தமான மண்ணை வேறு யாருக்கும் தாரைவார்க்காதீர்கள் என கேட்டோம். இன்று எங்களுடைய மண்ணில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் பொறுப்பாக இருக்கும் மகாவலி அதிகாரசபை வழங்கியுள்ளது. நாங்கள் இப்போதும் கேட்கிறோம் எங்கள் மக்களுக்கு சொந்தமான மண்ணை வேறு யாருக்கும் தாரை வார்க்காதீர்கள் என உரையாற்றி இருந்தார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகாவலி அதிகாரசபை அவ்வாறு காணிகளுக்கான உத்தரவு பத்திரங்களை வழங்கியதாக நான் அறியவில்லை. அப்படி நடந்திருந்தால் அதனை நான் உடனடியாக தடுத்து நிறுத்துவேன்.
இவ்வாறான பிரச்சினைகள் குறித்து நாங்கள் மிகுந்த புரிந்துணர்வுடன் நடந்து கொண்டிருக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் இவ்வாறன பிரச்சினைகளில் மிகுந்த புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM