அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை லிரிக் மெக்கென்ரி கடந்த செவ்வாய்க்கிழமை காலை 5 மணியளவில் அதிவேக நெடுஞ்சாலையில் அரை நிர்வாணக் கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
லிரிக் 20 வாரக் கருவை சுமந்து கொண்டிருந்த கர்ப்பிணித் தாயாவார்.
சம்பவ தினமான கடந்த 14ஆம் திகதி காலை 5 மணியளவில் அதி வேக நெடுஞ்சாலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் அரை நிர்வாணமாக கிடக்கிறது என கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் பொலிஸார் விரைந்து மேற்கொண்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் நடிகை லிரிக் மெக்கென்ரி என தெரிய வந்துள்ளது.
லிரிக்கின் மரணம் தொடர்பாக அந் நாட்டு பொலிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரால நடிகை லிரிக் மெக்கென்ரி அவரது 26ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நட்சத்திர விடுதி ஒன்றில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு மது விருந்தளித்துள்ளார்.
லிரிக்கின் பிறந்த நாள் விருந்து விடிய விடிய நடந்துள்ளது. பின்னர் வீட்டிற்கு அதி வேக நெடுஞ்சாலையில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கையின் படி லிரிக் அளவிற்கு அதிகமாக மது அருந்தி போதையிலேயே இறந்துள்ளார்.
கொக்கைன் என்ற போதை மருந்தiயும் அவர் சாப்பிட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலம் பரிசோதனையில் இவர் கர்ப்பமாக இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
லிரிக் சடலமாக மீட்பதற்கு 3 மணித்தியாலத்திற்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் தனது நெருங்கிய சிறு வயது நண்பருடன் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களையும் வீடியோ காட்சிக்களையும் வெளியிட்டுள்ளார்.
லிரிக் அவராக சாலையில் நடந்து சென்ற போது மது அதிகமாக அருந்தியதால் உயிரிழந்துள்ளாரா? அல்லது அவருக்கு யாராவது வலுக்கட்டாயமாக மதுவை அருந்த வைத்து கொலை செய்து சடலத்தை சாலையில் கொண்டு வந்து போட்டனரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணைகளை நடாத்தி வருகின்றோம். என பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“கர்ப்பமாக இருந்த என் மகள் அளவிற்கு அதிகமாக போதைப் பொருள் உட்கொண்டதால் இறந்துவிட்டார் என விசாரணைகள் முடியும் முன்னரே கூறுவது சரியல்ல, அதிகாரிகள் விசாரணைகளை நடாத்தி முடிவு செய்யட்டும்” என லிரிக்கின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM