மீண்டும் இந்தியா திரும்பும் புத்த பெருமான்

Published By: Vishnu

16 Aug, 2018 | 11:06 AM
image

இந்தியாவிலிருந்து 57 ஆண்டுகளுக்கு முன்னபாக திருடப்பட்ட 12 ஆம் நூற்றாண்டைச் வெண்கல புத்தர் சிலையொன்றினை லண்டன் பொலிஸார் இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளனர். 

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த வெண்கல புத்தர் சிலையானது பீகார் மாநிலத்தின் நாளந்தாவிலுள் உள்ள தொல்லியத் துறை அங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இந்த புத்தர் சிலையானது கடந்த 1961 ஆம் ஆண்டு களவாடப்பட்டது.

இந் நிலையில் லண்டனில் நடந்த வர்த்தக கண்காட்சியொன்றில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தபோது இங்கிலாந்து கலைப்பொருட்கள் குற்றப்பிரிவு பொலிஸாரும் இந்தியா பிரைட் புராஜெக்ட் என்னும் அமைப்பைச் சேர்ந்த விஜய் குமார் என்பவரும் இந்த வெண்கல புத்தர் சிலை நாளந்தாவில் இருந்து திருட்டுப்போன அதே புத்தர் சிலைதான் என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து லண்டன் நகரின் ஸ்கொட்லாந்து யார்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சட்டபூர்வமாக இந்த சிலையை மீட்டெடுத்த பின்பு லண்டனில் நேற்று நடந்த இந்திய சுதந்திர தின நிகழ்வின் போது முறைப்படி அங்குள்ள இந்திய தூதரக உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானில் எல்லாம் அழிந்துவிட்டது ; மொஜ்தபா...

2026-07-14 13:04:47
news-image

சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்...

2026-07-14 12:58:29
news-image

ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 கப்பல்கள்...

2026-07-14 12:28:49
news-image

நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர்தப்பிய நபர்!

2026-07-14 12:27:48
news-image

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில்...

2026-07-14 07:20:14
news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10
news-image

பங்களாதேஷில் கடும் மழை : வெள்ளப்...

2026-07-13 10:51:37
news-image

வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை பூமியதிர்ச்சி: பலி...

2026-07-13 10:59:16
news-image

ஐரோப்பாவில் வெப்ப அலையினால் ஜூன் மாத...

2026-07-13 09:44:43
news-image

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல...

2026-07-13 06:25:54