நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் கள் தமது சொத்து விபரங்களை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்காவிடின் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்ப டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அத்துடன் சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் பிர ஜாவுரிமையை தடைசெய்யும் வகை யிலான சட்டத்திருத்தம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்ண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர் தலில் போட்டியிட்ட வேட்பாளர் கள் சிலர் இதுவரைக்கும் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவி ல்லை. இதன்படி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்காவிடின் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும்.
தற்போதைக்கு சொத்து விபரங்களை சமர்ப்பிக்காதவர்களுக்கு வழ க்கு தாக்கல் செய்தமைக்கு 100 ரூபாவே தண்டப்பணமாக அறவிடப்படுகின்றது. எனினும் சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத வேட்பா ளர்களின் பிரஜாவுரிமையை தடை செய்யும் வகையிலான சட்டத்திருத் தம் செய்யவதற்கு திட்டமிட்டுள் ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM