தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி சந்திமாலின் துணையுடன் மூன்று விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டி ஒரேயொரு போட்டியை கொண்ட இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியானது இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டி ஆகியவற்றில் விளையாடி வந்தது.
இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டித் தொடரினை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் பின்னர் நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டித் தொடரை தென்னாபிரிக்க அணி 3:2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
அதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான இருபதுக்கு 20 போட்டி கொழும்பு, ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன் பிரகாரம் தென்னாபிரிக்க, இலங்கை அணியின் பந்து வீச்சுக்களை எதிர்கொள்ள முடியாது 16.4 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
தென்னாபிரிக்க அணி சார்பாக அணித் தலைவர் டீகொக் 20 ஓட்டங்களையும் ஹெண்ட்ரிக்ஸ் 19 ஓட்டங்களையும் கிளேசன் 18 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.
வெற்றியிலக்கு 99 தான் என்ற இலகுவாக எண்ணி களமிறங்கிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே ரபடா அதிர்ச்சி வைத்தியம் அளிதார். இதன்படி இலங்கை அணி நான்கு ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மூன்று ஓட்டங்களுடன் குசல் பெரேரா சம்ஸியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த குசல் மெண்டீஸும் ரபடாவின் ஆறாவது பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதன்படி இலங்கை அணி முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாற ஆரம்பிக்க அடுத்தடுத்து களம்புகுந்த தினேஷ் சந்திமால் மற்றும் தனஞ்சய டிசில்வா அதிரடி ஆட்டத்துக்கு அஸ்திபாரம் இட்டனர்.
தனஞ்சய டிசில்வா நான்காவது ஓவரில் ஒரு 6 ஓட்டமும் 2 நான்கு ஓட்டங்களையும் விளாச மறுமுனையில் தினேஷ் சந்திமாலும் தனது பங்கிற்கு ஆறாவது ஓவரில் அடுத்தடுத்து ஒரு நான்கு ஓட்டத்தையும் ஒரு ஆறு ஒட்டத்தையும் பெற்றுக் கொடுக்க ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி 6.3 ஆவது ஓவருக்கு 50 ஓட்டங்களை கடந்தது. இதையடுத்து இவர்கள் இருவம் இணைந்து 40 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிய தனஞ்சய டிசில்வா 4 நான்கு ஓட்டங்களுடனும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 31 ஓட்டங்களை பெற்று ஜூனியர் டாலாவின் பந்தில் பெலக்கொய்யோவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் மெத்தியூஸும் எவ்வித ஓட்டங்களையும் பெறாது சம்ஸியின் பந்து வீச்சில் கிளேசனின் அற்புத பிடியெடுப்பு காரணமாக ஆட்மிழந்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கி ஆடிவந்த தசூன் சானக்கவும் 11 ஆவது ஓவரில் சம்ஸியினுடைய பந்தில் அடுத்தடுத்து மூன்று நான்கு ஓட்டங்களை விளாசி 11.5 ஆவது ஓவரில் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க திஸர பெரேராவுட் டக்கவுட் முறையில் சம்ஸியினுடைய பந்தில் போல்ட் ஆனார்.
எனினும் தன்னிலை மாறாது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் சந்திமால் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியாக இலங்கை அணி 16 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தென்னாபிரிக்க அணி நிர்ணயித்த 99 ஓட்டங்களை தொட்டது.
வெற்றிக்கு வழிவகுத்த தினேஷ் சந்திமல் 36 ஓட்டங்களுடனும் இசுறு உதான ஐந்து ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் ரபடா, சம்ஸி மற்றும் ஜூனியர் டலா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் டூமினி ஒரு விக்கெடடினையும் கைப்பற்றினர்.
அத்துடன் தென்னாபிரிக்க அணி இருபதுக்கு 20 போட்டிகளில் பெற்றுக் கொண்ட குறைந்த ஓட்ட எண்ணிக்கை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM