மத்துகம சம்பவம் ; மூவருக்கு விளக்கமறியல்

Published By: Vishnu

13 Aug, 2018 | 03:10 PM
image

(இரோஷா வேலு)

மத்துகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கொட பகுதியில் காரில் பயணித்திருக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைதுசெய்துள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 ஆம் திகதி யடதொல - அளுத்கம வீதியில் மணிக்கொட பகுதியில் சூதாட்ட கும்பலொன்று காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது வேனில் வந்த முகமூடி அணிந்த கும்பல் அவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலினால் மூவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வாவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் பனிகல குருளுபத்த பகுதிதயைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த மதுகம குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை மதுகமை பகுதியில் வைத்து கடந்த 11 ஆம் திகதி கைதுசெய்தனர். 

நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை மதுகமை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதிவான் அவர்கள‍ை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12