இலங்கையில் முதன்முறையாக விமானம் தயாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ் வருட, இறுதிக்குள் இதன் ஆரம்பப் பணிகள் மேற்கொள்ளப்படும் என விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தெரிவித்தார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த எயார் மார்ஷல் கபில ஜயம்பதி புனித புத்த தந்தத்தை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர் தியவதன நிலமே நிலங்க தேவவுடன் கலந்துரையாடியபோது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முதலில் சிறிய ரக விமானம் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். இது முதலில் இரண்டு பயணிகள் செல்லக்கூடிய சிறிய ரக வகையில் அமையும். அதுமட்டுமன்றி, மிக இலகுவாக குறைந்த விலையில் இவ்விமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதே போன்று இலகுவாக விமானப் பயிற்சி பெற்றுக்கொள்ளவும் இதனைப் பயன்படுத்த முடியும். இதனைத் தயாரிப்பதற்கான விசேட மத்திய நிலையம் இரத்மலானை பிரதேசத்தில் அமையவுள்ளது எனவும் கபில ஜயம்பதி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM