சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு கடத்தி வந்த இலங்கை பிரஜைகள் இருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
குறித்த இருவரும் இன்று அதிகாலை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு குறித்த தங்க பிஸ்கட்களை கடத்தி வர முற்படுகையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தபோது ஒருவரின் காற்சட்டை இடுப்புப் பட்டியில் தங்க பிஸ்கட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததோடு மற்றைய நபரின் பணப்பையில் குறித்த தங்க பிஸ்கட்கள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் அவற்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மாபாகே பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரும் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த தங்க பிஸ்கட்களின் பெறுமதி சுமார் 65 இலட்சம் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியான 10 தங்க பிஸ்கட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM