அமைச்சர்களே யாரென்று தெரியாத சபை- சி.தவராசா 

Published By: Daya

10 Aug, 2018 | 09:37 AM
image

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகிய இருவருமே சட்டரீதியாக மாகாண அமைச்சர்கள். மற்றைய 4 பேர் அமைச்சர்களா? என்பது உறுதிப்படுத்தப்பட இயலாத நிலையில் அவர்கள் பேரவைக்கு பொறுப்புகூறும் உரிமை அற்றவர்கள். என வடமாகாணசபை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

வடமாகாணசபையின் 129ஆவது அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. 

இதன்போது மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், சுகாதார அமைச்சரிடம் வாய்மொழி மூல கேள்விகளை எழுப்பியிருந்தார். அதன் போது குறுக்கிட்ட எதிர்கட்சி தலைவர் சி.தவராசா, சபையில் தாம் ஒரு ஒழுங்கு பிரச்சினையை எழுப்பவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனின் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்கலாம். ஆனால் வேறு எவரும் பதிலளிக்க இயலாது. காரணம் சட்டரீதியாக மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் மட்டுமே அமைச்சர்கள். இங்குள்ள மற்றய அமைச்சர்கள் யார்? என்பது உறுதிப்படாத நிலையில் ரவிகரனின் கேள்விக்கு முதலமைச்சர் தவிர்ந்த மற்றய யாரும் பதிலளிக்க இயலாது என தெரிவித்தார். 

இதனையடுத்து குறித்த விடயத்தில் தலையிட்ட அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனின் வாய்மொழிமூல கேள்வியை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்ததுடன், எதிர்கட்சி தலைவர் சி.தவராசா சபைக்கு கொண்டுவரவுள்ள விசேட கருத்து ஒன்றுக்கு அனுமதி வழங்கினார். 

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனால் தான் பதவிநீக்கப்பட்டது தொடர்பாக, டெனிஸ்வரனால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், நீதிமன்ற இடைக்காலத் தடை உத்தரவு கடந்த யூன் மாதம் 29ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டது. 

குறித்த இடைக்காலத்தடை உத்தரவின் அடிப்படையில் டெனிஸ்வரன் தொடர்ந்து அமைச்சராக இருக்கின்றார் என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. 

அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபை ஒன்றிற்கு முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்களிற்கு மேல் இருக்க முடியாது. ஆனால் இன்று வடக்கு மாகாண சபையில் ஆறு அமைச்சர்கள், செயற்படுகின்றார்கள். 

இவ்விடயம்  சீர் செய்யப்படாத நிலையில் கௌரவ ஆளுநர் அமைச்சரவையைக் கூட்டவேண்டாமென்று பிரதம செயலாளரிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 

ஆதலால் முதலில் இந்த மாகாண சபையில் யார் அமைச்சர்கள் என்று எமக்கு கௌரவ முதலமைச்சர் அவர்களால் ஒழுங்கு செய்யப்படும் வரை சபையில் அமைச்சர்களிற்குரிய ஆசனங்கள் ஒழுங்கு செய்யப்படக் கூடாதென அவைத் தலைவரை கேட்டுக் கொள்கின்றேன். 

இன்று அமைச்சர்களே யாரென்று தெரியாத சபையில் நாம் கூட்டுப் பொறுப்பினையும், கூட்டு வகை கூறலையும் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இதற்கு நிரந்தரமான தீர்வொன்று உடனடியாகக் காணப்படல் வேண்டும். இன்றேல் இச்சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தல் அர்த்தமில்லாத ஓர் செயற்பாடு ஆகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19